Friday, May 02, 2025

அடுப்பிலே ச்சீனிச்சட்டி (2025 இந்தியப்பயணம் பகுதி 15 )

விநோதமா இருக்கும் கட்டிலுக்கு அந்தாண்டை அடுப்பில் சீனிச்சட்டி.....  என்னன்னு பார்க்கலாம், வாங்க.  காலையில் கண் திறக்கும்போதே  இன்றைக்குச் சிகிச்சை ஆரம்பம் என்ற நினைவுடன், என்ன செய்யப்போறாங்களோன்னு  லேசா ஒரு ஆர்வமும் பதற்றமும் வந்தது உண்மை.
காலைக்கடமைகளை முடிச்சுட்டு, கனகாம்பரமாலை சூட்டிக் குழந்தையைக் கும்பிட்டதும்  ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கீழே போறோம். லிஃப்ட்க்குப் பக்கம்தான் ஒரு வட்டக் கண்ணாடி இருக்கு. அங்கே ஒரு க்ளிக். நாள் அப்பதான் ஆரம்பமாகும் எனக்கு. அதே போல ப்ரேக்ஃபாஸ்ட் படமும் எடுப்பேன்.  தினம் மகளுக்கு அனுப்பணும்.  லோட்டஸில் எனக்குப் பிடிச்ச அம்சமும் இந்த ப்ரேக்ஃபாஸ்ட்தான். 

ஒன்பதே முக்காலுக்குக் கிளம்பியாச்சு.  கமீஸும்,ஸல்வாருக்குப் பதிலா ஒரு ஸ்கர்ட்டும் உடை. விஜி நம்மைக்கொண்டுபோய் மருத்துவமனையில் விட்டார். ஒரு நிமிட் ரைடுதான். ஆனால் நார்த் போக் க்ராஸ் செய்ய  ஒரு ரெண்டுமூணு நிமிட் நிற்கணும். வாசல் புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு உள்ளே போனேன்.
நமக்குத் தேவையான மருந்தெண்ணெய் சமாச்சாரங்களையெல்லாம்  வாசல் பக்கம் இருக்கும்  பார்மஸியில் இருந்து வாங்கி ஒரு பக்கம் வச்சுட்டு,  நம்மாண்டை வந்து எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவுன்னு பார்த்தாங்க.  எவ்ளோன்னு கேட்டேன்....... நார்மலாம் !!!!
என்னை மட்டும் உள்ளே கூட்டிப்போகும்போது கூடவே வந்த இன்னொருவர் மருந்துகளையெல்லாம் வாரி எடுத்துக்கிட்டு வந்தாங்க.  எவ்ளோ நேரம் ஆகுமுன்னு கேட்டதுக்கு , பதில்  ஒரு ஒன்னரை மணிக்கூறு. நம்மவரிடம் ஒன்னரை மணி நேரமாகுமாம். நீங்க இங்கேயே இருந்து என்ன பண்ணப்போறீங்க.  லோட்டஸ் போயிட்டு அப்புறமா வந்தால் போதுமுன்னேன். 

அறைக்குள் போனால்.... அந்த விநோதமான கட்டிலும்  ச்சீனிச்சட்டியும்.  
அறைக்குள்ளே ஒரு பக்கம் குளிமுரி.  சிகிச்சை முடிஞ்சதும் குளிச்சுட்டுக் கிளம்பலாம்.  ரெண்டு மூணு பாட்டிகளைத் திறந்து சீனிச்சட்டியில் ஊத்திட்டு அடுப்பில் ஏத்தினாங்க.  இன்னொரு ரெண்டு மூணு பாக்கெட்டில் இருந்த சூரணங்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்துட்டு, ரெண்டு துணி மூட்டைகளாக் கட்டுனாங்க.  இதுக்குப்பெயர் கிழி. பொற்கிழின்னா.... தங்கக்காசு இருக்கும் மூட்டை. இது வெறும்  மருந்துன்றதால் வெறும் கிழி ! 

(என்ன செய்யறாங்கன்னு பார்த்துக்கிட்டு நின்னேனே தவிர படம் எடுக்கத் தோணலை. அப்புறமா நினைவுக்கு வந்து க்ளிக்கினவைகளே இவை.  சிகிச்சை நடக்கும்போதும்  க்ளிக்க முடியாதில்லையா.......  அதனால் கூகுளாண்டவர் அருளிய படமும் பதிவில் உண்டு )

நல்ல உயரமான கட்டில் என்பதால் ஏறி உக்கார ரெண்டு படிகளும் உண்டு கேட்டோ !   ஸ்கர்ட்டைத் தொடைவரை உயர்த்திட்டுப் படுக்கணும். ரெண்டு கால்களுக்குமே வைத்தியம் !

எண்ணெய் நல்லாச் சூடானதும்  மூட்டைகளை அதில் முக்கி எடுத்து ஆளுக்கு ஒருபக்கமா நின்னு நம்ம கால்களில்  தேய்க்கறாங்க. முதலிலேயே சூடு ரொம்ப இருந்தால் சொல்லுங்கன்னதால், அப்பப்ப 'ஐயோ சூடு சூடு' ன்னு சின்னதாக் கத்திக்கிட்டு இருந்தேன். அவுங்க சொல்றபடி நேராகப்படுத்தும், குப்புறப்படுத்தும், ஒருக்களிச்சுப்படுத்துமா, என் கால்களை சூட்டுக்கு ஒப்புக்கொடுத்துட்டேன். சுருக்கமாச் சொன்னா  காலை பார்பக்யூ பண்ணிட்டாங்க.  இதுலே எண்ணெய்  வழிஞ்சு,  அந்த தோல்மெத்தையில் பரவி நம்ம உடம்பை நனைச்சுக்கிட்டு இருக்கு.  எந்தொரு ஸல்யம்? 

கைதானே சிகிழ்ச்சிக்குது.... வாயுமா ?  'சூடு சூடு'ன்னு கத்துற நேரம் தவிர நம்ம வாயும் சும்மாத்தானே கிடக்கு, இல்லையோ! 

இருவரில் ஒருவர் கேரளமங்கை. இன்னொருவர் தமிழ்நாடு.  முன்னவர் கேரளாவில் கோட்டக்கல் தலைமை மருத்துவ மனையில் பயிற்சி பெற்றவர்.  பின்னவர், இங்கே சென்னையில் பயிற்சி. முன்னவர் அஞ்சாறு கொல்லம் எக்ஸ்பீரியன்ஸுடு.  பின்னவர் ரெண்டு  வருஷம். முன்னவருக்குத் தமிழ் கொஞ்சூண்டு தெரியும். பின்னவருக்கு மலையாளம் கொஞ்சூண்டு புரியும் !

ஒத்தடம் (! )கொடுப்பது நின்னப்போ சரியா ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.  வழுக்கும் மெத்தையிலிருந்து எழுந்து உக்காரவே  உதவி வேண்டியிருக்கு.  தோர்த்து ரெண்டு எடுத்து  உடலில் இருக்கும் எண்ணெயை எல்லாம்  துடைக்கணும். சதசதன்னு உள்ளங்காலில் இருக்கும் எண்ணெயைத் துடைச்செடுக்கலைன்னா நடக்கும்போது வழுக்கி விழுவது உறுதி ! 
ஒரு பத்து நிமிட் இந்தத் துடைக்கும் படலம்.  இப்ப ஒரு ஸ்டூல் மேலே உக்கார்ந்துக்கலாம்.  ஒரு சின்ன  தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வச்சு அதில் ஆப்பிள்ஸைடரை ஊத்தி, அதில் வேறெ ரெண்டு சின்னப்பேக்கில் இருக்கும்  சூரணத்தைப்போட்டுக் கலக்கிக் காய்ச்சி எடுத்தாங்க. களிம்புப் பதத்தில் இருப்பதை நம்ம முழங்கால்களில் பத்துப்போட்டு விட்டு,  இதுக்குன்னே வச்சுருக்கும் துணிகளால்  கட்டுப்போட்டு விட்டாங்க.  ஆச்சு ! 

ஒரு ரெண்டு மணிநேரம் அப்படியே 'பத்தோடு' இருக்கணும்.  அப்புறம், கட்டைக் கழட்டி எடுத்துட்டுச் சுத்தம் செஞ்சுடலாம்.  இங்கேயே குளிச்சுட்டும் போகலாம். 

இங்கே ரெண்டு மணி நேரம்  ச்சும்மா உக்கார வேணாம். லோட்டஸுக்குப் போயிடலாமுன்னேன்.  பாக்கி எண்ணெய், சூரணங்கள், கிழிப்பொதிகள்னு நம்ம மருந்துவகையறாக்களை ஒரு பையில்  போட்டு நம்மாண்டை கொடுத்தாங்க.  மறுநாள் சிகிச்சைக்கு வரும்போது கொண்டு வரணும்.  இப்போ இன்னொரு முறை ரத்த அழுத்தம் பார்த்தாங்க.  

எத்ர ? 

நோர்மலா !

இப்போத்  தெரிஞ்சு போச்சு, இந்த  சிகிச்சை எப்படி இருக்கப்போகுதுன்னு, இல்லே ?  லோட்டஸுக்கு வந்துட்டோம். அறைக்குப்போய் சேரில் உக்கார்ந்துக் கட்டிலில் கால்களைத் தூக்கி வச்சுக்கணும். நிறைய பேப்பர்களைக் கட்டிலில் பரத்திவிட மறக்கக்கூடாது.  பகல் ஒன்னரை மணி வரை  இப்படியே.....  நேரம் போக்க நமக்குத்தான்  வலை இருக்கே !
அப்புறம் கட்டைக் கழட்டிக் காய்ஞ்சு ஒட்டிப்பிடிச்சுருக்கும் பத்து மருந்தைச் சுத்தம் செஞ்சு குளிச்சுட்டு வர ரெண்டரை மணி ஆகிருச்சு.   ரெண்டே முக்காலுக்குக்கிளம்பி சாப்பிடப் போறோம்.  நேத்து ராத்ரி சங்கீதாவிலிருந்து திரும்பும்போது ' அருவி' கண்ணில் பட்டது.  அங்கேயே போய்ப் பார்க்கலாமுன்னு.......  அவரவருக்கு வேண்டியதை வாங்கியாச்.  எனக்கொரு ஜீரா ரைஸ்.


ருசி சுமாராத்தான் இருக்கு.  சாப்பிட்டு முடிக்கும்போது மணி மூணே முக்கால்.  பாவம், நம்மவரும் , விஜியும். என்னால்தான் இப்படி வேளை தவறி சாப்பிடவேண்டியதாப் போச்சு.  வேற வழி உண்டான்னு பார்க்கணும்.    

மகளிடமிருந்து 'விஷ்லிஸ்ட்' வந்துருக்குன்னு, திரும்பவும் போத்தீஸ் போனோம்.  ஷாப்பிங் ஆச்சு.  முந்திமாதிரி இல்லாமல் கட்டைப்பைகளைத் தாராளமாத் தர்றாங்க. ஆனால் இதிலும் தரம் கிடையாது. முந்தியெல்லாம் சணல் நாரில் இருந்த  பைகள், இப்போ ப்ளாஸ்டிக் நாராக மாறியிருக்கு. 

லோட்டஸ் திரும்பும் வழியில் காப்பிரெடியில் டீ !  அரைமணி நேர ஓய்வுக்குப்பின்  அடையார் அநந்தபதுமனை ஸேவிக்கப்போனோம். வழக்கம்போல் அருமையான தரிசனம். ஒரு தள்ளுமுள்ளு கிடையாது.  என்ன ஒன்னு.... சந்நிதி முன்னால் போட்டுருக்கும்  படிவரிசைகளில் உக்கார்ந்து நிம்மதியா   திருமுகம், திருப் பாதம் ஸேவிக்க  முடியாது. ஒரு மணைப்பலகை உயரம்தான்  இருக்கும். நம்ம முழங்காலுக்குச் சரிப்படாதே.....  சிவன் சந்நிதிக்குப்போகும் வழியில் போட்டுவச்சுருக்கும் பெஞ்சில் போய் உக்கார்ந்திருந்தோம்.          
அடுத்தமாசம் நாலாம் தேதி ப்ரம்மோத்ஸவம் ஆரம்பம். அதுக்கு வேண்டிய டொனேஷன் கலெக்‌ஷன் ஆரம்பிச்சுருக்கு ! நாமும் ஒரு தொகை கொடுத்தாச்சு.  லிஸ்டுலே  இருபது  கிலோ கு  மிளகாய்னு பார்த்ததும் திக் னு ஆச்சு எனக்கு......  ஏற்கெனவே மிளகாய் வற்றல் இருபது கிலோ வேற இருக்கு !

எட்டு மணிக்கெல்லாம் லோட்டஸ் வந்தாச்சு.  ராத்ரி டின்னர்னதும், எனக்குப் பசி இல்லைன்னுட்டேன். விஜியும்  பசி இல்லைன்னதும்...... தேவைப்பட்டா ஏதாவது  லோட்டஸிலேயே வாங்கினால் ஆச்சு, இல்லே?

இப்பதான் சிகிச்சை முறை, நேரம் எல்லாம் தெரிஞ்சு போச்சே.  எதுக்காக விஜியைக் காலையிலே வரவழைச்சு தேவுடு காக்க வைக்கணும்?  மறுநாள்  பகல் ரெண்டரைக்கு வரச் சொல்லிட்டு அறைக்குப் போனோம். 

ராத்ரி ஒன்பது மணிக்கு மேலே..... ஒரு ப்ளேட் இட்லி கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து.  வெறும் வயித்துலே படுக்கக்கூடாதில்லையா ?

தொடரும்........... :-)

8 comments:

  1. கடைசியில் நிறைய படங்கள் சின்னச்சின்னதா சேர்த்திருக்கீங்க....

    இரண்டு நாட்களுக்கு முன்  சிவாஜி வீட்டுக்கு பின்னாடி வீட்டுக்குப் போய் வந்தோம்!

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம்.

    படங்கள்..... அடராமா..... இங்கே மூணாவது நாளா விடாத மழை. ப்ளொக்கருக்கு என்ன ஆச்சோ !!!!

    நன்றி. இப்போ சரி பண்ணிட்டேன்.
    சிவாஜி வீடு, உண்மையிலேயே ஏலத்துக்குப் போகுதா என்ன ? ப்ச்....

    ReplyDelete
    Replies
    1. இல்லை.  பிரபு அதில் அண்ணன் ராம்குமாருக்கு உரிமை இல்லைன்னு சொல்லிட்டார்.  மேலும் மூன்று கோடி கடனுக்கு 150 கோடி ரூபாய் வீட்டை  வைப்பீங்களான்னும் கேட்டிருக்கார்.  ஏதோ நாடகம் நடக்குது...

      நீங்க போக் ரோட் போனீங்கன்னு சொன்னதும் நானும் சொன்னேன்.  அங்கதான அவர் வீடு?

      Delete
  3. @ஸ்ரீராம்,
    உண்மைதான். மூணு கோடிக்கு 150 கோடி பணயம் எப்படி ? ப்ச்...
    நம்மாஸ்பத்ரி நார்த்போக். சிவாஜி வீடு சௌத் போக். அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் அந்தப்பெரிய வீட்டைப் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  4. சூடான எண்ணைச் சிகிச்சையும் தொடங்கிவிட்டது . வலிக்கு இதமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி,

      வலிக்கு இது சூடு போட்ட மாதிரிதான்ப்பா !!!!

      Delete
  5. இந்த சிகிச்சை காலுக்கு இதமா இருந்திருக்குமே.

    நம்ம அருவி ன்னு ஹோட்டலா? நம்ம மக்கள் இது பத்தி சொல்லவே இல்லையே!.

    கீதா

    ReplyDelete
  6. வாங்க கீதா,
    ரெண்டு கால்களையும் பார்பக்யூ பண்ணிட்டாங்க!

    ஜி என் செட்டி ரோடில் சங்கீதாவுக்கு எதிர்வாடையில் அருவி இருக்கு.

    ReplyDelete