Tuesday, December 10, 2013

இனி எல்லாம் நலமே!

முகம் பளிச்ன்னு  இருக்கு.  என் கண்கள் விரிவதைப் பார்த்ததும் ஷேவ்  பண்ணிக்கிட்டேன்.  'டூத் ப்ரஷ், அண்ட் பேஸ்ட், ஷேவிங் கிட்  கொடுத்தாங்க'ன்னார். பல் சமாச்சாரம் மட்டும் தெரியும். ஆனா ஷேவிங் கிட் கொடுப்பாங்கன்னு  இப்பதான் தெரியும்.

கண்ணாடி இல்லைன்னு   கொஞ்சம் மனவருத்தம்.  சீப்பு வேற இல்லையாம்:(  ஆஹா ஆஹா....  குணமாகிக்கிட்டு வர்றார்.  உடல் சரியில்லைன்னா  அழகு ரெண்டாம் பட்சம் இல்லையோ? தலைவாரிவிட்டதும் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் லுக் வந்துருச்சு:-)  நாங்க அஞ்சே முக்காலுக்கு  வந்துருக்கோம்.அதுக்குள்ளே டின்னர் முடிஞ்சுருக்கு! (இங்கே நியூஸியில் இதுக்குப்பெயர் டீ. ! கிவி வழக்கம்)

இது தெரியாமல்  இங்கே வந்த புதிதில், தோழி ஒருவர் சில நண்பர்களை 'டீ' க்கு வாங்கன்னு சொல்லி இருக்கார். நம்மூர் தேநீர் விருந்து என்ற அனுமானம்.  சில நொறுக்ஸ் வகைகளும்  கெட்டில் நிறைய தேநீரும் போட்டு வச்சாச்சு.  வந்தவங்க எல்லோரும்  இண்டியன் ஸ்நாக்ஸ் தின்னு டீ குடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருக்காங்க.

என்னடா இது. இன்னும் உக்கார்ந்திருக்காங்க? அவுங்க எப்பப்போறது,நாம் டின்னர்  எப்போ சமைக்கறதுன்ன்னு யோசனை.   பொறுத்துப்பொறுத்து பார்த்த  விருந்தினர் ஒருத்தர் சமையல் ஆகிருச்சான்னு    கேட்டுட்டாங்க. இவுங்க  தயங்கித் தயங்கி இல்லே இனிமேல்தான்ன்னு இழுத்தவுடன்  எல்லோருக்கும் அதிர்ச்சி:-)

அப்பதான்  தோழிக்கு  விவரம் கிடைக்குது. அவுங்க  கிவி டீ க்கு வந்திருக்காங்க.தோழி இண்டியன் டீ கொடுத்துருக்காங்கன்னு:-)))))  அப்புறம் போய் கொஞ்சம் டேக் அவே  வாங்கிவந்து சமாளிச்சாங்களாம். வெறும் டீ குடிக்கக் கூப்பிடணுமுன்னா,  'ஜஸ்ட் கம் ஃபார் அ கப்பா'  னு சொல்லணும்.




கைப்பையில் இருந்து சீப்பை எடுத்துக் கொடுத்தால் கையைத்  தூக்கி தலை வார முடியலை பாவம்:(  வேனிட்டி அறை  ரெண்டு இருக்கு. எழுந்து அதுக்குப்போக முடியலை. Catheter  போட்டுருக்கே.  ஸலைன் ட்ரிப் வேற போய்க்கிட்டு இருக்கு.  கொஞ்சம் நடக்கலாமான்னு நர்ஸம்மாவிடம் கேட்டதுக்கு   அவுங்கஒரு ஸ்டேண்ட் கொண்டுவந்து  சகல இணைப்பையும்  ஸ்டேண்டிலுள்ள மெஷீனுக்கு மாத்தி விட்டாங்க.  திரும்பி வந்ததும் சுவற்றில் ப்ளக் பண்ணிக்கலாமுன்னும் சொன்னாங்க. டிவிடி பிரச்சனை வந்துருமேன்னு  அதுக்கான தனி ஸ்டாக்கிங்ஸ் போட்டுவிட்டுருக்காங்க நேத்து சர்ஜரியின் போது.  இப்போ நடக்கணுமென்றதும்  வழுவழு என்றுள்ள தரையில் வழுக்கிட்டால் என்னசெய்வதுன்னு  AntiSilp socks கொண்டுவந்து காலில் மாட்டிவிட்டாங்க நர்ஸம்மா.

மெள்ள  அந்தக் காரிடாரில்  மெது நடை. அப்படியே அங்கங்கே என்ன இருக்குன்னு  எக்ஸ்ஃப்ளோர் செஞ்சோம்.  நாலு செட்ஸ் ஆஃப் பாத்ரூம், கழிவறைகள், வேனிட்டி ரூம் (அட்டகாசமா லைட்டிங், ட்ரெஸ்ஸிங் மிர்ரர் எல்லாம் பளபள!)  வார்டின் கடைசியில் ஒரு  டிவி ரூம். ஒரு பத்து வசதியான இருக்கைகள் போட்டு  32 இஞ்ச்  எல் ஸி டி டிவியை  சுவத்துலே பொருத்தி இருக்காங்க.

நாளைக்கு வரும்போது  டாய்லெட்ரி பேக்  கொண்டு வரேன்னேன்.  பொழுதன்னிக்கும்  பயணம் போய்வருவதால்  பயணப்பொட்டியில் எப்பவும் தயாராக இருக்கும்தான்.  நேத்து பயணம் முடிச்சுக் கொண்டு  வந்த பெட்டிகள் எல்லாம் வீட்டுக்கூடத்தில்  அம்போன்னு கிடக்கு.  போட்டது போட்டபடி ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்தோமுல்லெ!

ஆஸ்பத்திரி கௌனில்  பார்க்கும்போது நோயாளி லுக் வந்துருது:(  நமக்கு விருப்பமென்றால்  நாம் வழக்கமா அணியும் உடைகளைப் போட்டுக்கலாம். பொதுவா இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய  உரிமைகளுண்டு.  எதாவது நம்ம மனசு பாதிக்கும்படி  பணியாளர்கள் (டாக்டர்கள் உட்பட!) நடந்தால்  உடனே புகார் செய்யலாம்.  ஆங்கில மொழி தெரியலைன்னா   ஒரு மொழி பெயர்ப்பாளரையும் நமக்கு எற்பாடு செய்வாங்க. இந்தப் பட்டியலில்  ஹிந்தி கூட இருக்கு!  ஆஸ்பத்திரி முழுக்க அங்கங்கே புகார் பெட்டி. அதை கவனமா எடுத்துப் பார்த்து ஆவன செய்யறாங்க.

இன்னிக்கு ஒரு அஞ்சாறு நிமிச நடை போதும்.  தள்ளாட்டம் வேற இருக்கு. இன்னும் கொஞ்சம் முகம் மலரட்டுமேன்னு  என் கைப்பையில் இருந்த  கோபாலின் மொபைல் ஃபோனை எடுத்துக் கொடுத்தேன்.  கோடி சூர்யப்ரகாசம். ஒரு அம்பதறுபது மெயில்கள்  வந்துருக்கு. எல்லாம் குசலம் விசாரிச்சுத்தான்.

தோழியும் கணவரும் வந்தாங்க.  கொஞ்சநேரம் விசாரிப்புகள். டூஸ் அண்ட் டோண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க.

கையோடு  கொண்டுபோயிருந்த  நைட்டி(பஜாமாஸ்)யை  அலமாரியில் வச்சுட்டு மறுநாள் சார்ஜர் கொண்டு வரேன்னுட்டு நாங்கள் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம்.

அடுத்தநாள் காலையில்  எனக்கு அழைப்பு.  எல்லாம் இவர்தான். அதான் கையில் ஃபோன் இருக்கே!  காலை உணவு முடிச்சுட்டாராம். இன்னிக்கு ஞாயிறு ஆனதால்  நாங்க ரிலாக்ஸா சாயங்காலம் வந்தால் போதுமாம்.  ராத்திரி கொஞ்சம் ஜுரம் வந்ததாம்.சின்னதா மூச்சுத் திணறல். ஆக்ஸிஜன் வச்சாங்களாம். இப்போ பிரச்சனை இல்லைன்னார்.

நாங்கள் ஒரு நாலரைக்குப் போனோம்.  புள்ளியைக் காணோம்.  டிவி அறைக்குப் போனேன்.  நினைச்சது சரி.  அங்கேதான் ஓய்வா உக்கார்ந்துருந்தார்.  வீட்டு உடுப்பு அதன் மேல் ஆஸ்பத்த்ரி கௌன். கதீட்டர் அவுட்! குளிச்சாராம்.  இப்போ ஜூரம் இல்லை.வயித்துவலி போயே போயிந்தி. இட்ஸ்   Gகான்:-)  ஒரே ஒரு குறை.....  டிவி ரிமோட்டை சுவரில்  ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க:(



அதானே....  போகட்டும். ஆளாளுக்கு கையில் வச்சுக்கணுமுன்னா   ஒரு பத்திருவது ரிமோட் வாங்கிப் போடணுமில்லையோ? அந்த அறையிலிருந்து வியூ அருமையா இருக்கு.  நம்மூர் ஏவான்  ஆறு. தொட்டடுத்து  போட் ஷெட்.  வாடகைக்குப் படகு(Kayak)  எடுத்துக்கிட்டு நாமே சுத்தலாம்.  வேணாமுன்னா punting  கூட உண்டு.

உள்ளூர் நண்பர்கள்  மூணு பேர் குடும்பத்துடன் விஸிட் வந்து போனார்கள். நாலு ஸ்பூன் தயிர்சாதம் குட்டியூண்டு  தூக்கில் கொண்டு போயிருந்தேன்.  சோறு கண்டவுடன் முகம் மலர்ந்தது.

திங்கள் காலையிலே போயிட்டேன்.  லஞ்ச் சமயம்  மகள் வந்து  வீட்டுக்குக் கூட்டிப் போனாள். மாலை வேலை முடிஞ்சு வந்ததும் மகளும் நானுமா அப்பாவைப்போய்ப் பார்த்துவந்தோம்.  நேத்து இரவும் காய்ச்சல் வந்துச்சாம்(  மற்றபடி கெட்டிங் பெட்டர், டே பை டே. (டச் வுட்)  ஐவி கூட எடுத்தாச்சு. ஆனால் கையில் குத்திவைப்பு அப்படியே இருக்கு.  ஒரு அவசரமுன்னா சட்னு கனெக்ட் பண்ணிடலாம்.

செவ்வாய் காலை போனால்......  டாக்டர் குழு கூடி இருக்கு. டிஸ்சார்ஜ் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறார். 24 மணி நேரம் ஜுரமில்லாம இருந்தால்தான் வீடுன்னு கண்டிப்பாச் சொல்றாங்க. நேத்து இரவும்  ஜுரம் வந்து போயிருக்கு.  "அதெல்லாம் ஒன்னுமில்லை. கட்டிலுக்குப் பக்கத்தில் ஹீட்டர் இருப்பதால்  ஜுரம் போல இருக்காம்."

'சரி.  வீட்டுக்கு விடறோம். ஆனால் எதாவது  பிரச்சனைன்னா உடனே  வரணும்' என்றதோடு டிஸ்சார்ஜ் எழுதிக் கொடுத்தார் டாக்டர்.  எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிய  ஒன்னரை மணி நேரமாச்சு. அதுக்குள்ளே வார்டில் இருந்த எல்லாருக்கும் டாடா பைபை சொல்லி முடிச்சார்:-)

 வார்டு சுத்தம் செய்யும்  பெண்  (ஃபிஜி)  'பையன் நல்லவன்.  சந்தேகமே வேண்டாம். பேசிப்பார்' என்றதும் எனக்குக் குழப்பம்!

மகளுக்கு சம்பந்தம் பேசி இருக்காங்க.  இவர் 'மகளைக் கேக்கணும்' என்று சொல்லி இருக்காராம். என்ன கதை? ன்னு கேட்டேன்.  ரெண்டு மூணுநாளா மகளைப் பார்த்ததும்   இவரிடம் விசாரிச்சு இருக்காங்க.' சொந்தக்காரப்  பையனுக்கு   பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம்  நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான்.  என்ன சொல்றீங்க'ன்னு  கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள்  ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)

மகளுக்கு சேதி சொல்லிட்டு (ஐ மீன், டிஸ்சார்ஜ் ஆனதை)  ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.

நம்ம மருத்துவர் தோழி தினமும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

இவருக்கு ஓரளவு குணமானதும்  சனிக்கிழமை கோவிலுக்குப் போனோம். நம்ம கோவிலில் தீபாவளி, புது வருசம், அன்னக்கூட்  எல்லாம் நடந்து முடிஞ்சுருக்கு.  நாம் ஏன் வரலைன்னு கேட்டு துளைச்செடுத்துட்டாங்க. அன்னக்கூட் ப்ரசாதம் எடுத்து வச்சுருந்தது கிடைச்சது.

மறுநாள் நம்ம வீட்டில் தீபாவளி. அன்றைக்குக் கார்த்திகை தீபமாகவும் அமைஞ்சு போனதால்..... எடு புடவையை.  புதுசு கட்டிக்கோ. கொண்டாடுன்னு .....    மகளும் வந்தாள்.  போனவருசம் வாங்கி வச்ச பட்டாஸ் பொதியில் இருந்து கம்பி மத்தாப்பை எல்லாம் எடுத்து கொளுத்தினோம்.






அடுத்த தீபாவளிக்குப் புதுப்புடவை வாங்கி வைக்கலாமா வேணாமான்னு இப்போ யோசனை:-)))))

இனி எல்லாம் நலமே!

ரொம்ப அலைஞ்சுட்டே... கொஞ்சநாள் சும்மா இரு என்றார்.

எப்படி????

கொஞ்சநாள் சமைக்காம இரு.
கொஞ்சநாள் காய்கறி நறுக்காமல் இரு.
கொஞ்சநாள் துணி துவைக்க வேணாம்.
கொஞ்சநாள் பாத்திரம் தேய்க்காமல் இரு

இப்படியெல்லாம் சொல்லப்டாதோ?

கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!


52 comments:

  1. உங்கள் பதிவு எல்லாமே great! நல்ல மனைவி அமைவதெல்லாம் நம்ம கையில் தான் இருக்கு!

    நான் என் லுங்கியை கூட என் பெற்ற்ரோர்களை எடுக்க விட்டதில்லை. இதுலே..என் மனைவியை மட்டும எப்படி!

    குறத்தி என்றாலும் நான் கல்யாணம் செய்வேன்; ஆனால், நான் நூல் விட்ட மூன்று குறத்திகளுக்கும் என்னை பிடிக்கவில்லை: எவளும் என்னை எத்துக் கொள்ளவில்லை!

    அப்புறம் ஒரு மேல் ஜாதிப் பெண்ணக்கு நூல் விட்டேன்--எல்லாம் சுபம்@!

    ReplyDelete
  2. தலைப்பும் சொல்லிச் சென்றவிதம்
    அதற்கு இணையாக படிப்படியாக
    சந்தோஷத்தை நோக்கி நகர்ந்து செல்லும்படியான
    புகைப்படங்களும் முடிவாக கொண்டாட்டங்களுடன்
    முடித்த விதத்தை மிகவும் ரசித்தேன்

    உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் இல்லே
    தானே தந்த நானா என்ற பாடல்தான் இந்தப் பதிவைப்
    படித்ததும் நினைவுக்கு வந்தது

    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  3. எங்களுக்கும் மகிழ்ச்சி:)!

    ReplyDelete


  4. "இனி எல்லாம் நலமே!"

    என்றும் நலமாக இருக்க இறைவனைப்பிரார்த்திக்கிறோம் ..


    //இங்கே நோயாளிகளின் உரிமை என்ற ப்ரோஷர்கள் வச்சுருக்காங்க. அதில் நமக்குச் சாதகமாகவே நிறைய உரிமைகளுண்டு. //

    இந்த உரிமையை படித்ததால் தான் அந்த நாட்டு மருத்துவமனையிலிருந்து தப்பித்தேன் ..!

    ReplyDelete
  5. டைப்பிங் செய்யாம எப்படி இருக்க முடியும்...?

    சுவாரஸ்யமாகவும், பூரண நலம் குறித்தும் மிக்க மகிழ்ச்சி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அப்பாடா! நிம்மதியாக இருக்கிறது. புதுவருடம் அமர்க்களமாக ஆரம்பமாகட்டும்!

    ReplyDelete
  7. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி துளசிம்மா.வாழ்க வளமுடன் நலமுடன்!

    ReplyDelete
  8. ஹப்பாடா !!!! துளசி இப்ப தான் நிம்மதி ஆச்ச்சு . காலைல தான் ஒரு பின்னூட்டம் போட்டேன் . என்னாச்சுனு கேட்டு ....
    இருவரும் இளைத்து போய் இருக்கீங்க . Take care
    இன்னும் முழுதும் படிக்கலை . உங்களிருவரையும் பாத்ததும் பின்னூட்டம் அனுப்ப வந்துட்டேன் .
    இனி எல்லாம் நலமே :)))))))

    ReplyDelete
  9. எல்லாம் நன்மைக்கே! கோபால் சாருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. தலைப்பை படித்ததும் நிம்மதியாச்சு டீச்சர்...

    கோபால் சாரை விசாரித்ததாகச் சொல்லுங்கள்..

    புது வருடம் இன்பமயமாக அமைய பிரார்த்தனைகள்..

    ReplyDelete
  11. கோபால் சார் நலம் அறிந்து மகிழ்ச்சி அக்கா.

    ReplyDelete
  12. ஊட்டுக்கு வந்ததும் அண்ணாவை வேலை வாங்க ஆரம்பிச்சாச்சா!! ஆயுதபாணியா நிக்கிறாரே :-))))

    //கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!//

    இது கொள்ளாமே!!.. அப்றம் பின்னூட்டம் வாசிக்க முடியாதுன்னு பிட்டைப் போட்டு வையுங்க :-)

    ReplyDelete
  13. இனி எல்லாம் நலமே....

    படித்த எங்களுக்கும் நிம்மதி. மகிழ்ச்சி....

    ReplyDelete
  14. அன்பின் டீச்சர்,

    கோபால் அண்ணாவை வைத்தியசாலை உடையில் பார்க்க மனது கலங்கியது. இப்பொழுது பூரண குணமாகியுள்ளதில் மகிழ்ச்சி. அது என்றும் நிலைக்கட்டும். பிரார்த்தனைகள் பலித்துள்ளன.

    கோபால் அண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது, மகளுக்கு ஒரு நல்ல திருமண வாழ்க்கையை உருவாக்க இறைவன் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம்.

    எல்லாம் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சி டீச்சர். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் !

    ReplyDelete
  15. அப்பாடி... இப்பதான் திருப்தியா நிம்மதியா இருக்கு.

    அசத்தோமா சத்கமய
    தமசோமா ஜ்யோதிர்கமய
    வித்யோமா அம்ருதம்கமய
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

    நீங்கள் வணங்கும் மாலவன், மாதவன், விண்ணளந்த நாயகன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் கொடுக்கட்டும். :)

    ReplyDelete
  16. அப்பாடானு இருக்கு இப்போத் தான்! :)

    ReplyDelete
  17. தம்பதி சகிதம் நீங்க ஒரு வாட்டி எங்க வீட்டுக்கு 'டி'க்கு வரனும் ..! ஹா ஹா

    ReplyDelete
  18. மிகக மகிழச்சி. நலமுடன் வாழுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இனி எப்போதும் நலமாக இருக்க என் வேண்டுதல்கள்.

    ReplyDelete
  20. மனம் நிறைவாக உள்ளது டீச்சர். எண்ணம் போல இனி எல்லாம் நலமே. இருவரும் இளைத்துப்போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. கொஞ்சம் ஓய்வு தேவைதான். புதுப்புடவை அட்டகாசம். அது இந்தநாளுக்காகத்தான் காத்திருந்திருக்கிறது போலும். மனம் கலங்கிய நிலையிலும் நிலை கலங்காத எழுத்து. பாராட்டுகள் டீச்சர்.

    ReplyDelete
  21. All is well

    All our Best Blessings.

    Perumal Saved us All
    Perumal Saves us All
    Peruaml Will Save us All.

    subbu thatha.
    meenachchi paatti

    ReplyDelete
  22. அப்பாடா! உங்களிருவரையும் பார்க்க பெரிய ஆசுவாசம்! இப்படியே இருக்க நம்பெருமாளும், ரங்கநாயகியும் அருளட்டும்!

    ReplyDelete
  23. Teacher,
    Wish you both a very happy and healthy life!

    All prayers are answered!

    Regards,
    Ezhilarasi Pazhanivel

    ReplyDelete
  24. அழகா மத்தாப்பு கொளுத்தும் டீச்சரும் கோபால் சாரும்..
    அப்படியே தில்லானா மோகனாம்பாள்-ல்ல வர சிவாஜியும்-பத்மினியும் போலவே இருக்காங்க-ல்ல?:))

    அப்பாடா!

    அரங்கன் அருளாலும், முருகன் முறுவலாலும்..
    இனி நலமே திகழ! பொலிக பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம்!
    --------

    Drip Bottle கையில் பிடிச்சிக்கிட்டே நடைப் பயிற்சி..
    எனக்கு மிகவும் பழக்கமாகிப் போன/ பிடிச்ச ஒன்னு:)

    //கொஞ்சநாள் டைப்பிங்க செய்யாம இரு(வாம்)!!!!//

    மயிலை ஆடாதே-ன்னு சொன்னாப் போலத் தான்,
    துளசியை, டைப்பாதே என்பதும்!:)))

    Hurrah! டீச்சரை பேர் சொல்லி ஒருமையில் அழைச்சாச்சி!
    எல்லாம் ஒரு "திருஷ்டி"-கண்ணேறு கழிக்கத் தான்:)

    ReplyDelete
  25. அன்பு மனைவி கிடைப்பது கடினம்! கோபாலுக்கு அது கிடைத்துள்ளது.

    ReplyDelete
  26. சொந்தக்காரப் பையனுக்கு பொண் பார்த்துக்கிட்டு இருக்கோம் நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கான். என்ன சொல்றீங்க'ன்னு கேட்டாங்களாம். ஸோ...திருமணங்கள் ஹாஸ்பிட்டலிலும் நிச்சயிக்கப்படும்:-)//

    இனி எல்லாம் நலமே!
    வாழ்த்துக்கள்.
    சார் குணமானது அறிந்து மகிழ்ச்சி.
    இறைவனுக்கு நன்றி.
    ஊர்களில் நெட் இல்லாமல் ஒருமாதம் எப்படியோ ஓட்டி விட்டேன்.
    //டைப்பிங் செய்யாம எப்படி இருக்க முடியும்...?//
    நீங்கள் எழுதாமல் எப்படி ஒய்வு எடுக்க முடியும்!

    ReplyDelete
  27. வாங்க நம்பள்கி.

    //நல்ல மனைவி அமைவதெல்லாம் நம்ம கையில் தான் இருக்கு!//

    எதுக்கு இவ்ளோ கஷ்டம். யார் யாருக்கு யார் என்பதை 'மேலிடம்'தீர்மானிச்சுத்தானே உலகுக்கே அனுப்புது!

    நான் எப்பவும் நினைப்பது என்னன்னா.... (நாங்களும் சிந்திப்போம்லெ!)

    கடவுள் உயிர்களைப் படைக்கும் போது கையில் படைக்க எடுத்துக்கொண்ட பொருளை (வாட் எவர் இட் இஸ்) அதை ரெண்டாப் பிச்சு பூமிக்கு அனுப்பிடுவார். சரியான பாதி அமைஞ்சால் எல்லாம் நலமே.

    ஆனால் சிலசமயம் அந்த ரெண்டு பகுதிகளில் 100 % பொருத்தமானது இல்லாமல் சேர்ந்துருச்சுன்னாதான் விவாகரத்து ஏற்பட்டுருது. அதற்கு பொருத்தமான பகுதி கிடைச்சதும் இனிய வாழ்க்கை.

    எத்தனைபேர் விவாகரத்தாகி இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க என்றதைக் கவனிச்சபிறகு வந்த ஞானம்!

    ReplyDelete
  28. வாங்க ரமணி.

    வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்.

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்

    ReplyDelete
  29. வாங்க ராமலக்ஷ்மி.

    மகிழ்ச்சி அடைந்ததும் எனக்கு மகிழ்ச்சியே!

    நன்றீஸ்.

    ReplyDelete
  30. வாங்க இராஜராஜேஸ்வரி.

    //இந்த உரிமையை படித்ததால் தான் அந்த நாட்டு மருத்துவமனையிலிருந்து தப்பித்தேன்//!

    அட ராமா!பதிவுக்கான மேட்டர் ஆச்சே!
    விரிவா எழுதுங்க ப்ளீஸ்.

    ReplyDelete
  31. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

    அதானே!!!! எழுத்து இல்லையேல் இருத்தலில் சுகம் இல்லை' என்று நெருங்கிய தோழி எப்பவும் சொல்வாங்க!!!

    ReplyDelete
  32. வாங்க பந்து.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    வரும் ஆங்கிலப் புத்தாண்டு இந்த வருசம் வித்தியாசமான சூழலில் அமையப்போகுது!

    போய்வந்த பின் எழுதுவேன்:-)

    ReplyDelete
  33. வாங்க ஸாதிகா.

    அன்புக்கு நன்றிப்பா. மனம் நிறைந்துவிட்டது!

    ReplyDelete
  34. வாங்க சசி கலா.

    இளைப்பு நல்லதுதானே!!!! என்னதான் சோகம் என்றாலும் தொப்பை இளைக்கலையேப்பா:-))))

    அன்புக்கு நன்றீஸ்.

    ReplyDelete
  35. வாங்க தமிழ் இளங்கோ.

    வாழ்த்துகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  36. வாங்க ரோஷ்ணியம்மா.

    உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்கள் இனிய நன்றி.

    ReplyDelete
  37. வாங்க குமரன் தம்பி.

    அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  38. வாங்க அமைதிச்சாரல்.

    ஆஹா.... அந்த 'பிட்' ரியலி சூப்பர்:-))))

    இப்பெல்லாம் தினமும் ஒருமணி நேரம் தோட்டவேலை செய்யறார்.
    தலைவிதி ஸ்ட்ராங்கா இருக்கும் செடிகள் பிழைச்சிருக்கு:-)

    ReplyDelete
  39. வாங்க வெங்கட் நாகராஜ்.

    அன்புக்கு எங்கள் நன்றீஸ்.

    ReplyDelete
  40. வாங்க ரிஷான்.

    உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளும் எங்கள் மனம் நிறைந்த நன்றி.

    அந்தக் கல்யாணப்பேச்சு அப்படியே ஆஸ்பத்ரியோடு போச்சு!

    இன்னும் வேளை வரலைன்னு இருக்கணும்.

    ReplyDelete
  41. வாங்க ஜிரா.

    பெருமாளுக்கு நம்மைக் காப்பாத்துவதைத் தவிர வேறென்ன வேலை?

    மரம் வச்சவன் த்ண்ணி ஊத்தாமலா இருப்பான்?

    என்ன ஒன்னு அப்பப்ப கொஞ்சம் வெந்நீரை ஊத்திப்புடறான்ப்பா!

    ReplyDelete
  42. வாங்க கீதா.

    அன்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  43. வாங்க ஆனந்த.

    டீக்கு வர்றேன். எங்களுதா உங்களுதான்னு சொல்லுங்க:-)))

    ReplyDelete
  44. வாங்க மாதேவி.

    வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  45. வாங்க ஜோதிஜி.

    அன்புக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  46. வாங்க கீதமஞ்சரி.

    எதுக்கும்வேளை வரணுமே! அந்தப் புடவைக்கு கார்த்திகைதான் பிடிச்சிருக்கு போல!

    அன்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  47. வாங்க மீனாட்சி அக்கா & சுப்பு ரத்தினம் ஐயா.

    பெருமாளிடம் வேண்டியதற்கு எங்கள்மனம் நிறைந்த நன்றி.

    இதுவரை கைவிடலை. இனியும் விடமாட்டான் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.

    ReplyDelete
  48. வாங்க ரஞ்ஜனி.

    அப்பப்ப ஒரு அதிர்ச்சி வைத்தியம் செஞ்சுடறானே:-))))

    அன்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  49. வாங்க எழிலரசி பழனிவேல்.

    அனைவரின் பிரார்த்தனைகள் பலித்தன.

    அன்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  50. வாங்க கே ஆர் எஸ்.

    திருஷ்டி கழிஞ்சாச்சு. இனி புதுசு வராம இருக்கணும்:-)

    அன்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  51. வாங்க நம்பள்கி.

    அன்பான மனைவியா? கோபால் நறநறன்னு பல்லைக்கடிக்கும் சப்தம் கேக்குதா?

    ஜஸ்ட் மூணு சண்டைதான் ஒரு நாளுக்குன்னு லிமிட் வச்சுருக்கோம்:-)

    http://thulasidhalam.blogspot.co.nz/2005/06/blog-post_08.html

    ReplyDelete
  52. வாங்க கோமதி அரசு.

    (நெட்) பிரிவு அன்பை அதிகப்படுத்தும்.

    அன்புக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி.

    ஓய்வே எழுத்துதான் என்பது அப்பட்டமான உண்மை!

    மனசுக்குள்ளே எழுதி வைச்சுக்கணும்:-)))

    ReplyDelete