அதுக்காகக் கொண்டாடாம அம்போன்னு விட்டுடமுடியுமா சொல்லுங்க. இப்போ இருக்கும் சக்திக்கு ஏத்தபடி கொஞ்சமாவது செய்ய வேணாமா? அதி ஏமி ஏமோ பழமொழி சொல்வாங்களே.... ஆங்.... பொன் வைக்கிற இடத்தில் பூன்னு. அப்படி.
புகலிடமான ஹேக்ளி பார்க்குலேதான் கொண்டாட்டம். எங்கூர் ஃப்ளவர் ஷோ! எல்லா வருசமும் காதலர்தினத்தையொட்டியே எப்படியாவது ஏற்பாடு செஞ்சுருவாங்க. இந்த வருசம் சீன தீபத் திருவிழாவோடு 'க்ளாஷ்' ஆகிருமேன்னு கொஞ்சூண்டு தள்ளி வச்சதுதான். ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும்தானே? அங்கே வந்த சனம்தானே இங்கேயும் வரப்போகுது இல்லீங்களா? இந்த வருசம் ஃபிப்ரவரி மாசம் 17 முதல் மார்ச் 4 வரைன்னு கணக்கு.
சம்மர்(!!!!) டைம் ஃபெஸ்டிவல். (இங்கே இருக்கற சம்மருக்கு இதெல்லாம் டூ மச். இன்னும் 10 நாளில் கோடைகாலமே முடியப்போகுது. காலண்டரில் மட்டும்தான் வெய்யில்காலம். காணாமப்போன சூரியனை இந்தக் கோடைக்கால மூணுமாசமாய் தேடிக்கிட்டே இருக்கோம். இன்னும் ஆப்டலை. கையில் மட்டும் கிடைக்கணும்.அப்ப இருக்கு அவனுக்கு!)

அந்தக் காலத்துலே ( 2011 வரை) எங்கூர் கதீட்ரலில் நடுவில் நடைபாதை இருக்கும் பாருங்க அந்த இடத்தில் ஃப்ளோரல் கார்பெட்ன்னு 20 மீட்டர் நீளத்துக்கு மலர்விரிப்பு போட்டு வைப்பாங்க. உள்ளே ஒரு தூண் விடாமல் மலர் அலங்காரம், பக்கத்து தெருவில் இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் பூக்களால் அலங்காரம், இதையொட்டியே ஓடும் ஏவொன் நதியில் மிதவைகளிலும், கரையில் அங்கங்கே பலவித டிஸைன்களிலும் அலங்கரிச்சு விளக்குப்போட்டு ஜெகஜோதியா இருக்கும். டவுன் ஹாலில் இந்த நாட்களில் விசேஷ கச்சேரிகள், வெவ்வேற தலைப்புகளில் உலக மணப்பெண்கள், உலகக்குழந்தைகள், இப்படி அலங்கார அணிவகுப்புகள் எல்லாம் நடக்கும். எங்க ஊர் வேற கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்தபேர் படைச்சுருப்பதால் அட்டகாசமாக் கொண்டாடுவோம், கொண்டாடினோம்.
ஏற்கெனவே பொட்டானிக்கல் கார்டனில் பூக்கள் பரவாயில்லாமப் பூத்துக் குலுங்கி இருக்கு. அங்கே வச்சுக்கிட்டால் அலங்காரச்செலவு கொஞ்சம் குறையும். கோபால் வேற நாட்டில் இல்லையே போகணுமா வேணாமான்னு ஒரு யோசனை. மகள் ஃபோனில் கூப்பிட்டு நாளைக்கு என்ன ப்ரோக்ராமுன்னு கேட்டாள். குறிப்பிடும்படியா ஒன்னுமில்லைன்னேன். அப்போ ஃப்ளோரல் ஃபெஸ்டிவல் போகலாமான்னாள். ஆஹா....கரும்பு அதுவே கிடைக்கும்போது.......
பகல் சாப்பாட்டுக்குப்பிறகு போகலாமுன்னு முடிவாச்சு. 'பகல் சாப்பாட்டை என்னோட சேர்ந்து சாப்பிடு'ன்னு சொன்னதும் டீல் ஓக்கே ஆச்சு. எப்பவும் படு பிஸியா இருக்கும் மகளை இப்படி இழுத்தால்தான் உண்டு. இட்ஸ் அ டேட்! எல்லாம் தோளுக்கு மிஞ்சினா தோழி என்ற கணக்குதான்.
அடை, தேங்காய்ச் சட்டினி, மாம்பழ சர்பத்ன்னு எளிமையான பகல் உணவு. ( அடை அவியல் காம்பினேஷன் எனக்குப்பிடிக்காது. ரொம்ப ஹெவியா இருக்கும்) கிளம்பிப் புகலிடத்துக்குப் பயணப்பட்டோம். 16 டிகிரி என்பதால் குளிர் தாங்கும்விதமா உடை:( கார்பார்க்கிங்கில் இடம் தேடிக் கொஞ்சம் அலைஞ்சோம். ஊரே வந்துருக்கு போல! இடம் கிடைச்சதும் நிறுத்திட்டு ஏவொன் நதியின் நடைபாலம் கடந்து தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சோம். சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை:-)
தகவல் அலுவலகத்தையொட்டிய குளத்தில் நாலு பெங்குவின், ஒரு டெர்ன் பறவை, ஒரு திமிங்கிலம் வரவேற்கிறோமுன்னு சோகமா நின்னதுகள். தோட்டம் சுற்றிப்பார்க்க ரெண்டு பெட்டிகளுடன் வண்டி பயணிகளை ஏத்திக்கிட்டு இருக்கு. அடை தின்ன காலுக்கு நடை ஒரு கஷ்டமா? பொடிநடையாப் பார்த்துக்கிட்டே போனோம்.
பூத்திருவிழாவுக்காக எங்கே அலங்காரம் வச்சுருக்காங்கன்னு சின்னச்சின்ன தகவல் அறிவிப்புகள் வச்சுருந்தாங்க. அதைக் கவனிச்சு அங்கங்கே போய்ப் பார்த்துக்கணும். எனக்குப் பிடிச்ச பகுதியில் ( பெரணி மரங்கள் அடர்ந்த மழைக்காடு) Eyes (I) Spy ன்னு நாமும் கலந்து மகிழும்விதமா ஒன்னு. ' I spy with my little eys something green'னு சொன்னதும் மகளுக்கு பழைய விளையாட்டு ஞாபகம் வந்துருச்சு:-) yeah. everything is green here ஹாஹாஹாஹா.

தொடரும்......:-)
PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது மலர்க்கண்காட்சி.
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நன்றி அம்மா.
வால்லா சீ நல்லா இருக்கு படங்கள். உங்களுக்கு வால் இல்லைனு படிச்சேனா! அதே நினைப்பு! :P :P
ReplyDeleteBeautiful pictures and your post. Thanks for sharing.
ReplyDeleteபடங்களும் விவரிப்பும் அருமை.
ReplyDelete//பதிவின் நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது மலர்க்கண்காட்சி.//
:) அது மட்டுமில்ல, பதிவு நீளமானால் விரல்வலிக்கும் நாளைக்கு எழுத முடியாது. எனக்கு பிரச்சனை தொடர்ச்சியாக தட்டச்சினால் மூச்சுவிட கஷ்டமாகும்
மாம்பழ சர்பத் #ரஸ்னா?
ReplyDelete:-)))))))
சாலீஸ் நிற்கிறதா. ஹைய்யோ அதுவும் இல்லைன்னு நினைச்சேன்பா:(
ReplyDeleteசந்தோஷமோ சந்தோஷம்.
வாத்தம்மா தான் இங்க வந்துவிட்டது. சந்தேகமே இல்லை.
படங்கள் அற்புதம்னு சொல்லிக் கை வலிக்கறது;)
இவ்வளவு சோகத்தையும் தாண்டி வந்து நல்லா இருங்கப்பா.
வாங்க ரத்னவேல்.
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
வாங்க கீதா.
ReplyDeleteவிடுவிடுன்னு நடக்கும் மகளின் பின் குடுகுடுன்னு ஓடவேண்டி இருக்கே:-)))))
வாங்க ஓலை.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
நம்ம தளத்தில் இது வெறும் 1301வது பதிவு. நேரம் கிடைக்கும்போது பழசைக் கொஞ்சம் புரட்டுங்க:-)))))
வாங்க கோவியாரே.
ReplyDeleteஉங்களைப்போல் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பதிவெல்லாம் என்னால் முடியாது.
ஒரேடியா கணினியில் அமர முடியாது. எதாவது வேலைகள் குறுக்கே வந்துகொண்டே இருக்கும். அது ஒரு ப்ரேக்:-))))
வாங்க ஹுஸைனம்மா.
ReplyDeleteரஸனா இல்லைங்க. இங்கே அல்ஃபோன்ஸா மாம்பழக்கூழ் டின்னில் கிடைக்குது. அதை ஃப்ரீஸர் ட்ரேயில் ஊத்தி ஐஸ் க்யூப்ஸ் பண்ணி வச்சுக்குவேன்.
மில்க்ஷேக் என்றால் நாலைஞ்சு ஐஸ் க்யூப்ஸ், கொஞ்சம் பால், ஒரு டீஸ்பூன் சக்கரை
மேங்கோ லஸ்ஸின்னா பாலுக்குப் பதிலா தயிர்.
சர்பத்ன்னா வெறும் தண்ணி கூடவே கொஞ்சம் வறுத்தரைத்த சீரகப்பொடி.
ப்ளெண்டரில் ஒரு சுத்து. ரெடி ஆகிரும்.
//போகணுமா வேணாமான்னு//
ReplyDeleteசமீப வருடங்களா நானும் இப்படி குழப்பத்தில் இருப்பேன். அப்புறம் பத்திரிகை செய்தி வரவர (கேமராப்) பொட்டியத் தூக்கிட்டு கெளம்பிடறது வாடிக்கையாயிட்டு:)!
ஃப்ளோரல் கார்ப்பெட் அழகு.
வலிகளையும் நம்பிக்கையாய் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள்.
//நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் //
உங்கள் ஊரின்(கார்டன் சிட்டி) தங்கை கொண்டாடிய குடியரசுதினக் கண்காட்சியின் இரண்டாம் பாகம் நானும் இனிதான் வெளியிடணும். இந்த வாரம் செய்கிறேன்.
வாங்க வல்லி.
ReplyDeleteசலீஸ் ஒரு 12 வருசமா சதுக்கத்தில் சர்ச்சுக்குப் பக்கத்தில் இருக்குப்பா.உள்ளூர் சிற்பக்கலைஞர் செஞ்சது. நல்லா கருப்பு க்ரானைட் பேஸ் வச்சு பிடிப்பிச்சு இருக்காங்க. அகலமும் கூடுதல். கீழ்பகுதி சுற்றளவு மட்டும் 2 மீட்டர். மேல்பகுதி 8.5 மீட்டர். உசரம் 18 மீட்டர். நல்ல ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர். அதான் தாக்குபிடிச்சிருக்கு இதுவரை (டச் உட்)
படங்கள் பகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteஅங்கிங்கெனாதபடி எல்லாத்தையும் ரசித்தேன்...
படங்கள், குறிப்பு என அனைத்தும் அருமை....
ReplyDelete//சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை:-)//
ரசித்தேன்...
//சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை//
ReplyDeleteஹா..ஹா..ஹா..
மிக அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு.
அடுத்த பகுதி இருக்கா? ரசிப்பதற்கு காத்திருக்கிறேன்.
படங்கள் ரொம்ப அழகா இருக்கு.. விண்டேஜ் வண்டி சவாரி செய்யலையா நீங்க :-)
ReplyDeleteeverything is green here
ReplyDeleteஎவர் கிரீன் நினைவுகள்.....
வாங்க ராமலக்ஷ்மி.
ReplyDelete//வலிகளையும் நம்பிக்கையாய் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள்.//
ஊரே இந்த விஷயத்தில் ஒன்றுபட்டுக் கிடக்கு. இடைவிடாத போராட்டம் என்றாலும் எப்படியும் மீண்டும் துளிர்த்து வந்துருவோம்!!
அக்காவுக்கு இருக்கும் ஆள்பலம் தங்கைக்கு இல்லைப்பா. அதான் ஹீனமாக் கொண்டாடிக்கறோம்.
வாங்க பாசமலர்.
ReplyDeleteரசிப்புக்கு நன்றிப்பா. மீண்டும் ரசிக்க வருக:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteரொம்ப'கழியுது'ன்னு இருந்த வாலை ரெண்டு மாசத்துக்கு முன்னே வெட்டிவச்சுருக்கேன்:-)))))
வாங்க ராம்வி.
ReplyDeleteஅடுத்த பகுதியை வெளியிட்டாச்சு, ரசீப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....
வாங்க அமைதிச்சாரல்.
ReplyDeleteஅதுக்குன்னு ட்ரெஸ்ஸப் பண்ணிக்கலையேப்பா:( அப்பத்தானே நல்லா இருக்கும்???
வாங்க இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteநினைவுகள் எல்லாம் க்ரீனாவே இருந்துட்டா....... எவ்வளோ நல்லா இருக்கும்!
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
ReplyDeleteநேரடியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வை
ஏற்படுத்திப் போனது.பகிர்வுக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க
வாங்க ரமணி.
ReplyDeleteரசிப்புக்கு நன்றிகள். அடுத்த பகுதியை இன்னிக்கு பதிஞ்சுருக்கேன்.
மலர்க் கண்காட்சி அழகான படங்களுடன் சூப்பரா இருந்தது டீச்சர்....
ReplyDeleteபகல் உணவாக அடை, தேங்காய் சட்டினி, மாம்பழ சர்பத்.....சூப்பர்ர்ர்ர்ர்ர்
வாங்க கோவை2தில்லி.
ReplyDeleteரசிப்புக்கு நன்றி.
எங்கே வாழ்ந்தால் என்ன..... நாக்கு சொன்ன பேச்சை எங்கே கேக்குது?:-)))))
சுழல் அமைப்பில் நீலநிறங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.:)
ReplyDeleteமனதுக்கு இனிய படங்களுடன் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
வாங்க மாதேவி.
ReplyDeleteதவறாமல் வந்தமைக்கு நன்றிப்பா.