அரசாங்கத்துலே கணக்கு வழக்கு பார்த்துக்கிட்டு இருந்த வித்யாதர் பட்டாச்சார்யா என்றவரைத் துணைக்கு வச்சுக்கிட்டு பக்காவா திட்டம் தீட்டி நகர நிர்மாணம் தொடங்கி நாலு வருசத்துலே கட்டி முடிச்சுட்டாங்க. ஜெய் சிங் ராஜா கட்டியதால் ஜெய்ப்பூர் என்று நாமகரணம் ஆச்சு. ஊரை ஒன்பது பகுதியாப் பிரிச்சு அதுலே நடுவிலே ரெண்டு பகுதி அரண்மனை சமாச்சாரங்களுக்கு ஒதுக்குனாங்க. மற்ற ஏழும் மக்களுக்கு. கடை கண்ணி எல்லாம் எங்கெ இருக்கணும், ஊருக்குள்ளே வர்றதுக்கு வழி எத்தனை வேணும் இப்படி எல்லாம் கணக்கோ கணக்கு. கோட்டைச்சுவர் மாதிரி சுத்திவரக் கட்டி ஏழு கோட்டை வாசல்கள் வச்சாங்க. அதுலே ஒரு வாசல் வழியா நுழைஞ்சு நாம் நகரத்துக்குள்ளே போறோம்.
கடைத்தெருவில் இருக்கும் வரிசைக் கட்டிடங்களின் தோளோடு தோள் சேர்ந்தமாதிரி நிக்குது இந்த ஜெய்ப்பூருக்கே 'லேண்ட் மார்க்'கா இருக்கும் ஹவா மஹல். பெரிய மைதானத்துலே நடுவில் அழகா நிக்குமுன்னு நான் செஞ்சு வச்சுருந்த கற்பனை 'டமால்'னு கீழே விழுந்துச்சு! இப்படியா கூட்டத்தோடு கோவிந்தா போடனும்? அஞ்சு மணிக்கே மூடிடறாங்க. நாளைக்கு எப்படியும் உள்ளே போய் பார்க்கணும். மஹலுக்கு முன்னால் ப்ளாட்பாரத்தைச் சின்ன கம்பிவேலி போட்டு தடுத்து வச்சுருக்காங்க.
இப்ப இந்த ஆல்பர்ட் ஹால் ம்யூஸியமா மாற்றப்பட்டிருக்கு. அதைச் சுற்றிப்போகும் சாலையில் இடதுபக்கமாவே போனால் ஒரு குன்றும் அதன்மேல் இருக்கும் கோட்டையும் கண்ணுலே படுது. மோதி டூங்ரி. (முத்துமலை) இதன் அடிவாரத்தில் பரந்து விரிந்த ஒரு பெரிய தோட்டத்தில் முத்தைப் பழிக்கும் வெண் நிறத்தில் பளிச்ன்னு நிக்குது பிர்லா மந்திர். பெரிய பார்க்கிங் வசதிகள். நாலைஞ்சு டூரிஸ்ட் பஸ்கள் வந்து நிக்குது. கூட்டம்கூட்டமா மக்கள்ஸ் வந்து இறங்குறாங்க. இந்தக் கோவில்களில் இறை நம்பிக்கை உள்ள அனைத்துலகத்தினருக்கும் அனுமதி என்பதால் கூட்டத்துக்கு எப்பவும் குறைவே இல்லை. இறைவன் எல்லோருக்கும் பொது! 1988 இல் கட்டி இருக்காங்க. கோவிலுக்கு உள்ளே மட்டும் படங்கள் எடுக்க அனுமதி இல்லை:( இந்த பிர்லா குடும்பத்தினர் நாடு முழுக்க அங்கங்கே கோவில் கட்டிவிடுவதையே டைம்பாஸ் ஆக்கிக்கிட்டாங்க போல.
தோட்டம் முழுக்க குண்டுமல்லிச் செடிகளின் வரிசை. எல்லாம் மொட்டு விட்டுருக்கு. பூக்கும் காலம் வந்தால் முத்துமலையையே தூக்கிட்டுப்போயிரும் வாசம்!!! தோட்டத்தில் ஒரு மண்டபம் கட்டி மனிதரூப சிவனை வச்சுருக்காங்க. அவரும் ஜடாமுடியும் புலித்தோலுமா ஹாய்யா உக்கார்ந்துருக்கார்.
பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயணன் கோவில். மூணுவித கோபுரங்களோடு இருக்கு. எலக்ட்ரானிக் கேட் கடந்து கருவறைக்குப் பக்கத்தில் இருக்கும் வாசல்வழியா உள்ளே போறோம். மஹாவிஷ்ணுவும் லக்ஷ்மியுமா ஆளுயர அளவில் நிற திருக்கோலம். பளபளன்னு பளிங்கு!! திவ்யமான அலங்காரங்கள். ஒரு பக்கம் பட்டர் ஒருத்தர் தீர்த்தம் வழங்கறார்.
அடடா...... என்ன காட்சி!!!! அடுத்த ஜென்மம் இருந்தால்....அதுலே பூனையா (அதும் நியூசியில் மட்டுமே) பிறக்கும் வரம் வேண்டணும் என்ற ஐடியாவில் சின்ன மாற்றம் செஞ்சுக்கலாம் போல இருக்கே! குருவி அதுவும் பிர்லா கோவில் குருவி ஓக்கேன்னு சாமிகிட்டே கேக்கணும்.

கருவறையைச் சுற்றி இருக்கும் பிரகார நடைபாதையில் நமக்கு ரெண்டு பக்கமும் பளிங்கில் செதுக்கிய காட்சிகள். கங்கை வானத்தில் இருந்து இறங்கி வருதல், சீதா சுயம்வரம், சமுத்திரமந்தன்(பாற்கடலைக் கடைதல்) குருகுலத்தில் பிள்ளைகள் கற்றல், கண்ணனின் ராசலீலா, காளிங்கமர்த்தனம், ராஜசூய யாகம், வியாஸர் சொல்லச்சொல்ல தந்தப்பேனாவால் புள்ளையார் பாரதம் எழுதுதல் இப்படி எல்லாமே அருமை. இந்த வகைப்பளிங்கு ஏதோ சோப்புக் கட்டி போல செதுக்கி எடுக்க ஏதுவா இருக்கும் போல. நிகுநிகுன்னு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சித்திரங்கள் சிற்பங்கள் எல்லாமே உயிரோட்டமான ஜொலிப்புடன். திரு அண்ட் திருமதி பிர்லாவுக்கு வெளிப்பிரகாரத்தில் சிலைகள் வச்சுருக்காங்க. அந்தம்மா சேலைக் கொசுவம்கூட துல்லியமா வந்துருக்கு!
கடைவீதிகள் எல்லாம் விளக்கு வெளிச்சத்தில் பளபள. ஹவா மஹல் ஃபோகஸ் லைட்டில் நான் இங்கே இருக்கேன்னு சொல்ல, அந்த ஜன்னல் துளைகளில் வண்ண வண்ண விளக்குகள். நாளைக்கு வந்து பார்க்கணும். பொம்மைக் கடைகளில் ஷாப்பிங் கொஞ்சம் செய்யலாமான்னா..... வண்டி நிறுத்தும் இடம் ஒன்னும் கிடைக்கலை. இருட்டில் புது ஊரில் என்ன ஏதுன்னு புரிஞ்சுக்கக் கஷ்டம்தானே? ப்ரதீப்புக்கும் ஓய்வு கொடுக்கணும். காலையில் இருந்து ட்ரைவிங்............ பாவம் இல்லையா?
நமக்குன்னு வந்து வாய்க்குது பாருங்க சம்பவங்கள்...... நிச்சிந்தையா இருக்க விடாதே........
தொடரும்..................:-)
நல்ல கட்டுரை… ஹவாமஹல் நாங்கள் பகலில் மட்டுமே பார்த்தோம். இரவு நேரம் விளக்கு வைத்தபின் இன்னும் அழகாய் காட்சி அளித்திருக்கும் போல…. தொடரட்டும் பின்க் சிட்டி ஊர்வலம்….
ReplyDeleteஜெய்ப்பூர் நகரம் பற்றி நல்ல அறிமுகமும் புகைப்படங்களும்
ReplyDeleteஉள்ளேன் டீச்சர் ;)
ReplyDeleteஉங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
ReplyDeleteமறக்காம,மறுக்காம எழுதுங்க..
ஜெய்ப்பூரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
"ஹவா மஹல்' ஒளியில் சூப்பராக இருக்கிறது.
ReplyDeleteபிர்லா மந்திர் முத்தாய் பளிச்சிடுகிறது.
வட நாட்டில் சாமி சிலைகள் வித்யாசமாக இருக்கும். ஆனால் இதில் உள்ள சிலைகள் தமிழ்நாட்டில் இருப்பது போலவே இருக்கிறதே?
ReplyDeleteதாமதமா பதில் சொல்றதுக்கு எல்லோரும் மன்னிச்சுருங்க ப்ளீஸ்.
ReplyDeleteவாங்க வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteஆமாம். இரவில் இன்னும் அழகாத்தான் ஜொலிச்சது. அதையும் விட்டுவைக்கலை. வரும் பகுதிகளில் விளக்கம் வரும்:-)
வாங்க ஷண்முகவேல்.
ReplyDeleteசந்தர்ப்பம் கிடைச்சால் தவறவிடாமல் போய் ரசித்து வர வேண்டிய மாநிலம்தான் இந்த ராஜஸ்தான்.
வாங்க கோபி.
ReplyDeleteகடைசி பெஞ்சா????????????
வாங்க அறிவன்,
ReplyDeleteசுட்டி கொடுக்கப்படாதோ???????
வாங்க சிவகுமாரன்.
ReplyDeleteஎல்லாம் 'கண்ணால் கண்டபடி' வகையில் வந்துக்கிட்டு இருக்கு:-))))
வாங்க மாதேவி.
ReplyDeleteச்சும்மா ஊர் சுற்றிப் பார்த்தால் எல்லா இடமும் பளிச் தான்:-)))))
வாங்க ஜோதிஜி.
ReplyDeleteஅப்படி ஒன்னும் ரொம்ப வித்தியாசம் இல்லைங்க. என்ன ஒன்னு நம்ம பக்கம் கருங்கல்லில் செதுக்குவதை இங்கே வெள்ளைப்பளிங்கில் செதுக்கி வச்சுடறாங்க. இந்தக் கல் ரொம்ப மிருதுவா இருப்பதால் அப்படியே இழைக்கமுடியுது.
கறுப்புப் பளிங்கு மட்டும் கண்ணனுக்கே!
துளசி மேடம்..
ReplyDeleteமாப்பு...
இங்க பாருங்க..
வாங்க அறிவன்.
ReplyDeleteஅடடா..... நம்ம மேலே இத்தனை நம்பிக்கையா!!!!!!!
கொஞ்சம் டைம் கொடுங்க. எழுதிடலாம்.
பல தளங்களில் எழுதும் நீங்களும் என்னைக் கவர்ந்த பதிவு எழுத்தாளர்களில் ஒருவர்..இன்னும் பலர் இருக்காங்க..ஆனால் அவங்க பக்கத்தில எல்லாம் சமீபத்திய இரண்டு வருடங்களில் பதிவையே காணும்..
ReplyDeleteசீக்கிரம் எழுதுங்க..நன்றி.
pink city super city!
ReplyDelete