வாதாபி கணபதே,
பண்டுரீத்தி கோலு
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
அலைபாயுதே
ஆயர்பாடி மாளிகையில்
செத்தி மந்தாரம் துளசி
என்ன தவம் செய்தனை
ஹரிவராசனம்
அருமையான வாசிப்பு. அப்படியே கொசுவத்தியைப் பத்தவச்சுருச்சு. எங்க அப்பா புல்புல்தாரா வாசிப்பார். வயலினும் ஹார்மோனியமும் கூட வாசிப்பார். ஆனால் எதையுமே எனக்குத்தான் கத்துக்க வாய்க்கலை:(
இடைக்கிடையில் வளரும் கலைஞர்களா, கோவிந்தராஜன் அவர்களின் மகன்( பெயர் நினைவில்லை) 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' பாட்டையும். சகோதரிகள் ரம்யா & ராதா ராஜசேகர், 'ஸ்ரீமன் நாராயணா, மாணிக்க வீணை ஏந்தும் பாடல்களையும் ஷ்ரத்தா என்ற சின்னப்பொண் ஒரு ஹிந்தி பாட்டையும் பாடுனாங்க.
நம்ம கோவிந்தராஜன் ஜி, நாஸாவுக்காக ஒரு சங்கதியை வடிவமைக்கும் ப்ரோக்ராம் அனுப்பிக்கொடுக்க, அதை அவுங்க தெரிவு செஞ்சு அங்கே அழைச்சுருக்காங்க. அநேகமா அடுத்த மாசம் அவர் அமெரிக்கா போய்வருவார். என்ன ஏதுன்னு விளக்கம் இன்னொருநாள் கேட்டுச் சொல்றேன் உங்களுக்கு. கோயில்விழாவில் அதுக்கான சந்தர்ப்பம் வாய்க்கலை.
சனிக்கிழமை, சரஸ்வதி பூஜையை சாயந்திரம் செஞ்சுக்கலாமுன்னு காலையில் கிளம்பி PVR தியேட்டருக்குப்போனோம். இதுமாதிரி ஒன்பது மணிக் காலைக் காட்சிக்குப்போய் வருசம் 30 ஆகுது. வட இந்தியாவில் தமிழ்ப்படம் தியேட்டரில் வருதுன்னா.... போனாப் போகட்டுமுன்னு , ஞாயிறுகளில் காலைக் காட்சியா ஒரே ஒரு ஷோ போடுவாங்க அப்பெல்லாம். பூனா வாழ்க்கையில் அடிச்சுப்பிடிச்சு எட்டரை மணி ஆட்டத்துக்கு ஓடுவோம்.
சண்டிகர் தமிழ் மன்றத்துக்கு ஸோலார் பேனல்ஸ் போட்ட வகையில் ஆன செலவைச்சரிக்கட்ட 'எந்திரன்' (தமிழ்) ஏற்பாடாகி இருந்துச்சு. வெள்ளிக்கிழமை இங்கே அரசு விடுமுறை என்றபடியால் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூணு நாட்கள் மூணு ஷோக்கள். கோபாலோட வேலை வேற மாநிலம் என்றதால் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போயிட்டார்.
நல்ல கூட்டம்தான். அப்பப்ப விஸிலடிச்ச அம்பதாயிரம் தமிழர்களில் ஒரு பகுதியினரைக் கண்டேன். ஏற்கெனவே ஹிந்தி ரோபோ ஓடிக்கிட்டு இருக்கு இங்கே. ஒருவழியா நானும் எந்திரன் பார்த்துட்டேன். ஒலி அமைப்பு நல்லாவே இருந்துச்சு. சென்னையில் காதைப்பிளக்கும் வால்யூமில் வைக்கிறது மாதிரி இல்லை. ஆனால் பாட்டு ஸீன்களில் கூடுதல் சத்தம். காதை அடைச்சுக்கிட்டு உக்கார்ந்ததுலே லேசாக் கண்ணயர்ந்துட்டேன் போல!
படம் பார்த்தபிறகு நம்மாட்களின் விமரிசனங்களைப் படிச்சப்பத்தான் அரிமான்னு ஒரு பாட்டு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். படத்தின் பிற்பாதிதான் பிடிச்சது. வில்லன் ரஜினி நல்லாச் செஞ்சுருந்தார்.
மாலையில் கோவிலில் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் விசேஷம்! சென்னைவாசிகளுக்கு நினைவிருக்குமோ என்னவோ...... ரெண்டு வருசத்துக்கு முந்தி, ஹனுமன் ரதத்தை இழுத்துக்கொண்டு பட்டதாரி வாலிபர் ஒருவர் உலக சமாதானத்துக்காகப் பாதயாத்திரை செய்கிறார்ன்னு செய்திகளில் வெளிவந்துருக்கு. தமிழ் மலையாளம்,. தெலுங்கு நாளிதழ்களின் பேப்பர் கட்டிங் எல்லாம் அழகா ஒரு ஃபோல்டரில் போட்டு வச்சுருப்பதைப் பார்த்தேன்.
போனவருசம் ஃபிப்ரவரி 7 ஆம்தேதி திருப்பதியில் இருந்து கிளம்பி ஜம்மு-காஷ்மீர் போய், அங்கிருந்து கிளம்பி வைஷ்ணவோதேவியின் தரிசனம் முடிச்சுக்கிட்டு இங்கே சண்டிகர் வந்துருக்கார். நவராத்ரி ஆரம்பதினத்துக்கு முதல்நாள் நம்ம கோவிலுக்குப் போனப்ப, கோவிலின் உள் வளாகத்தில் (ஏர்போர்ஸ் டெம்பிள் காம்ப்ளெக்ஸ்) ஒரு தேர் நிற்குதே....ன்னு கிட்டப்போய்ப் பார்த்தால்..... தங்கமா ஜொலிக்கும் ஹனுமன் தாமரை பீடத்தில் அமர்ந்துருந்தார். என்ன விவரமுன்னு விசாரிச்சதில் இப்பத்தான் பத்து நிமிஷமாச்சு. இழுத்துவந்தவர் குளிக்கப் போயிருக்காருன்னு சொன்னாங்க. அநேகமா மறுநாள் கிளம்பிருவாராம். நமக்கு இன்னிக்குக் கோவிலுக்கு வரத்தோணுச்சேன்னும் அட்லீஸ்ட் நேயுடுவின் தரிசனம் கிடைச்சதேன்னும் திருப்தியா இருந்துச்சு.
மறுநாள் மாலையில் ரதம் அங்கேயே இருக்கேன்னு விசாரிச்சதில், நவராத்ரி நாட்களில் இங்கே இருந்துட்டுப் போங்கன்னு விண்ணப்பிச்சதில் சரின்னுட்டாராம். தினம்தினம் நமக்குத் தரிசனம் ஆகிக்கிட்டு இருந்துச்சு. நிறைய பக்தர்கள் இல்லாத தருணங்களில் சீதாராம் ரமேஷ் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து விவரங்கள் சேகரிச்சுக்கிட்டு இருந்தேன். (உங்களுக்குச் சொல்லும் கடமை உணர்ச்சி இருக்கே!)
ஒருநாள் சீதாராம் ஜெய் சீதாராமுன்னு ஒரு பாட்டுப்போய்க்கிட்டு இருக்கு. ஒரு பெண் அங்கே நின்னு அது எந்த சினிமாப் பாட்டுன்னு ஸ்வாமிஜி ரமேஷைக் கேட்டுப் பிச்சுப்பிடுங்கறாங்க. எதுன்னு தெரியாதுன்றார் அவர். ஸிடியை வெளியே எடுத்துப்பார்த்துச் சொல்லுங்கறாங்க. அது எம்பி3 யில் யாரோ ரெக்கார்டு செஞ்சு யாத்திரையில் ஏதோ ஒரு ஊரில் பக்தர் ஒருவர் கொடுத்ததுன்னா கேட்டால்தானே?
கடைசியில் உங்க செல்ஃபோனைக் கொண்டு வாங்க. அதிலே ப்ளூடூத் இருந்தா ரெக்கார்டு செஞ்சு தரேன்னதும்தான் இடத்தைக் காலி பண்ணுனாங்க. மனிதரில் பலவகை!
நவராத்திரி கடைசி நாள் சனிக்கிழமையாவும் இருந்ததில் இன்னிக்கு நம்ம சண்டிகர் கார்த்திக் ஸ்வாமி கோவிலில் ஹனுமனுக்கு அபிஷேக ஆராதனைகள் செஞ்சு வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படிக்க முடிவாகி இருந்துச்சு. பொதுவா வடக்கே அநேக இடங்களில் துளசிதாஸர் ராமாயணம்தான் புழக்கத்தில் இருக்காம். சண்டிகரில் முதல்முறையா வால்மீகி!
காலையில் அஞ்சு மணிக்கு பூஜைகள் தொடங்கும். ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாமே கோவிலில் பக்தர்களுக்காக ஏற்பாடாகி இருக்கு. அஞ்சு மணின்னதும் நாம் முழிச்ச முழியே சரி இல்லை. அஞ்சு முதல் ஆரம்பம் எப்ப வேணுமுன்னாலும் வாங்கன்னு ரிலாக்ஸ் செஞ்சார் நம்ம ராஜசேகர். மாலை மலர்களால் அபிஷேகம் நடக்கப்போகுது. 500 கிலோ பூக்கள் வேணுமுன்னு சொன்னாராம் சீதாராம் ரமேஷ்.
சேவை சாதிக்கிறார் நேயுடு. அலங்காரம் பிரமாதமா இருக்கு. முன்னே தரையில் அந்த சின்ன விக்கிரகங்களின் வரிசை. ஒரு பெரிய சாளக்ராம். ஹனுமன் சாளக்ராமாம். முதல்முறையாப் பார்க்கிறேன்.
எட்டுவரை இருந்து நிகழ்சிகளைப் பார்த்துட்டுக் கிளம்பிட்டோம் நாங்க.
பக்தியே ஒரு போதையா ஆகி இருக்கு! அதுலே மூழ்குனா வெளிவரமுடியாதபடி ஆகிரும் போல!
ஜெய்ய்ய்ய் ஆஞ்சனேயாஆஆஆஆ..:))
ReplyDeleteசூப்பர் பகிர்வு டீச்சர்.:)
அருமையா இருக்கார் ஹனுமான்..விவரமெல்லாம் சூப்பர்..
ReplyDeleteநேத்திக்கு ராம்லீலா பாத்துட்டு
வரும்போது ஒரு
ஹனுமான் மாஸ்க் ம்.. வைக்கோல் உள்ளவைத்த தங்க கலர் கதையும் வாங்கிவந்திருக்கார் அண்ணாத்தை..
நவராத்திரி பூஜை, எந்திரன்,ஆஞ்சனேயர் கதை என எல்லாம் கலந்த ஒரு பதிவு நல்லா இருக்கு டீச்சர்:))))
ReplyDeleteபுல்புல்தாரா எங்கள் அப்பாவும் நன்றாக வாசிப்பார். என்ன நினைவை எல்லாம் எழுப்பிவிடுகிறீர்கள் துளசி.
ReplyDeleteஅனுமன்தாசருக்கு இத்தனை உறுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதுப்பா.
அடுத்தபடியாக ராம்லீலா முடியும் படங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
சந்தனக்காப்பு அலங்காரம் ஜொலிக்குது.. கண்ணை எடுக்கவே முடியலை :-))
ReplyDelete\\பக்தியே ஒரு போதையா ஆகி இருக்கு! அதுலே மூழ்குனா வெளிவரமுடியாதபடி ஆகிரும் போல!\\
ReplyDeleteஆகா...ஆகா.. தத்துவத்தை நோட் பண்ணிக்கிட்டேன டீச்சர் ;))
வாங்க ஷங்கர்.
ReplyDeleteஆஞ்சநேயன் அருள் அனைத்துப் பதிவர்களுக்கும் கிடைக்கட்டும்.
ஜெய் ஆஞ்சநேயா!!!!!
வாங்க கயலு.
ReplyDeleteஆஹா..... சீஸனல் பிஸினெஸ் இங்கேயும் நிறையப் பார்த்தேன். ராவணன் மாஸ்க் கூட இருந்துச்சு.
அண்ணாத்தையின் 'நேயர்' ட்ரெஸ் அப்பில் ஒரு படம் போடுங்க. நேயர் விருப்பம் இது:-))))
வாங்க சுமதி.
ReplyDeleteமுற்றிலும் புதிய ஊரில் இதுவும் நமக்குக் கிடைச்ச ஒரு புது அனுபவம்தான்:-)))
வாங்க வல்லி.
ReplyDeleteஇன்னிக்குக் கொலு எடுத்து வச்சதுலே நேரம் போயிருச்சு.
ராம்லீலா வந்துக்கிட்டே இருக்குப்பா.
ஏகப்பட்ட கொசுவத்தி இருக்குப்பா!!
ஹோல்ஸேல் நாந்தான்:-))))
வாங்க அமைதிச்சாரல்.
ReplyDeleteநல்ல அலங்காரம் செஞ்சாங்கப்பா.
தள்ளு முள்ளு ஒன்னும் இல்லாம, மனசுக்கு திருப்தியான தரிசனம் கிடைச்சது.
வாங்க கோபி.
ReplyDeleteபாயிண்டைப் பிடிச்சதுக்கு க்ரேஸ் மார்க் பத்து:-)
சின்ன ராம் ..ராம் :)
ReplyDeleteஅம்மன் அலங்காரம் சூப்பர்.
Dear Author
ReplyDeletewell. Your bulbul thara episode is amazingly.thanx for your neat penned.This, takes me a tremendous
memories which come back in flashes.In 1965 my dad bought for me one bulbul thara from Hydrabad.
It was used to play lot of tamil songs,like 'Venila mugam kungumam perum..' with the help of key-notes.Now that the memories are revealing.Thank u..
வாங்க மாதேவி.
ReplyDeleteஅம்மன் அலங்காரம், அன்னிக்கு அரிசி மாவு!!!!
வாங்க சிவஷன்முகம்.
ReplyDeleteபுல்புல்தாரா, 'வாசிப்பு' பலருக்கு(ம்) பழைய நினைவுகளை 'மீட்டி' இருக்கே!!!!!