தினசரியில் இருந்த தொலைபேசி எண்ணைக் கூப்பிட்டு உங்க நிகழ்ச்சி நடக்கும் ஹால் எங்கேன்னும் கேட்டுக்கிட்டார் நம்ம முன் ஜாக்கிரதை முத்தண்ணா. 'வாங்க வாங்க. கட்டாயம் வாங்கன்னு வரவேற்பு. இதென்ன ஆறேகாலுக்கே இப்படி இருட்டிப்போச்சு...... அங்கங்கே முக்குலே இருக்கும் கோவில்களில் எரியும் கற்பூரார்த்திகளைவச்சு வழி கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம்.(வழக்கம்போல தப்பான சில டர்னிங் எல்லாம் எடுத்துட்டுத்தான்) அசப்புலே பார்க்க ஒரு வீடு போல இருக்கு. சின்னதான வாசலைத் திறந்து உள்ளெ போனால் ஆடம்பரம் இல்லாத சின்ன ஹால். ஒரு முப்பதுபேர்போல இருந்தாங்க. ஆறரைக்கு நிகழ்ச்சி. 'டான்'னு ஆரம்பமாச்சு.
நாங்கள் ரெண்டாவது வரிசையில் இருந்தோம். எனக்கு முன்னால் 'எங்கியோ பார்த்த முகம்'. பிரதீபா பாட்டீல் ஸ்டைலில் ஜாக்கெட்.(ஐயோ...இந்தச் சூட்டில்....) அவுங்களுக்குப் பக்கத்தில் வைரம் டாலடிக்கும் பெரிய கம்மலுடன் ஒரு முதிய பெண்மணி. கொஞ்சம் சின்னக் கம்மலுடன் இன்னொருத்தர். (முகத்தைப் பார்த்தவுடன் ஒளிவெள்ளம் வெட்டி இழுக்கும் தோடுகள் பார்வைக்குத் தப்பலை.இல்லேன்னா கவனிச்சே இருக்கமாட்டேன்.ஹிஹி)
தமிழ்நாடு, ஆந்திரா கேரளான்னு ஆச்சு....கருநாடகத்துக்குத்தான் ஒன்னுமில்லைன்னதும் கோபால், அதெப்படி அதெப்படி''ன்னு துடிச்சுப் போயிட்டார்.
(பேசாம நீங்களே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுருங்கன்னு 'ஊக்கு'விச்சேன்:-)
சின்னக் கம்மல் அம்மாதான் கலைமாமணி ராஜலக்ஷ்மி. நடனக்கலைஞர். தேவி கிருஷ்ணாவின் நடன ஆசிரியர். நடுவில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடைகள் போத்தினார்கள். மூத்த கலைஞர். அந்தக் காலத் திரை உலகத்தாரகை. பி.எஸ். சரோஜா அவர்கள். எண்ணி நாலே வரி பேசுனாங்க. இன்னும் கொஞ்சம் பேசுங்கம்மான்னதும் 'எல்லாம் போறும்'ன்னாங்க. (அவுங்க நடிச்ச படங்கள் என்னெவெல்லாம் நான் பார்த்துருக்கேன்னு நினைச்சு மண்டையை குழப்பிக்கிட்டதுதான் மிச்சம். ஒரு படத்துலே உலக உருண்டையில் எம்ஜிஆரோடு பாடுன நினைவு. உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம்தானிரண்டு........ பழைய சினிமாக்களைத் துரத்தித்துரத்திப் போய்ப் பார்த்தக் காலம் போச்சே.... வெஸ்ட் மாம்பலம் நேஷனல் தியேட்டர் இன்னும் இருக்கா?)
கலைமாமணி ராஜலக்ஷ்மி அவர்கள், இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட்டமே வர்றதில்லைன்னு வருத்தப்பட்டார். ராஜசுலோசனா அவர்கள் இந்த வயதிலும் நல்லாப் பளிச்ன்னு இருக்காங்க. மகள் செய்யும் கலைச்சேவையைப் பாராட்டி வெறும் பரதநாட்டியம் மட்டுமுன்னு வச்சு ரசிகர்களைப் போரடிக்காம விதவிதமான வகைகளுடன் நாட்டியங்களைத் தேர்ந்தெடுத்து வழங்குனதைப் பாராட்டுனாங்க. அந்தக் காலத்தில் அவுங்க எப்படி வெவ்வேறு நாட்டியங்களைக் கத்துக்கிட்டாங்கன்னும் சொன்னாங்க.. பேத்தியின் தூண்டுதலினால்தான் மகளும் இந்தச் சேவையில் ஈடுபட்டுருக்காங்களாம். கலைக்குடும்பம். நல்லா இருக்கணும்.
(நாட்டியம் ஆடத் தெரிஞ்சுருக்கறது நடிக்க வருபவர்களுக்கானக் கட்டாயக் குவாலிஃபிகேஷனாத்தானே இருந்துச்சு. இப்போ? யார் இதுக்காக மெனெக்கெடுறா? பரதநாட்டிய உடைகளைப் போட்டுக்கிட்டுச் சாணி மிதிச்சால் ஆச்சு)
விதமா துள்சியைக் கொடுத்தாங்க.தேவி. (எல்லாம் சிம்பாலிக்கான ஒரு அடையாளம்தான். போகட்டும் மேடைவரை போயிருக்கேன்:-)
நாமோ புதுசு. என்ன உதவி செய்யமுடியுமுன்னு திரும்பிவரும் வழியில் கேட்டால்........ வந்த பதில் 'ரெண்டு இருக்கையை நிரப்புவொம்லெ' !!!
தலைப்பை நியாயப்படுத்த: நிகழ்ச்சி நடக்குதுன்னோ, அங்கே போகப் போறோமுன்னோ, ஒரு பதினைந்து நிமிசத்துக்கு முன்வரை தெரியாது. திடீர்னு பார்வையில் பட்டது. ஜஸ்டிஃபைடா? :-))))