Tuesday, April 25, 2006

நன்றி தேன்கூடே!

நன்றி தேன்கூடே!

தேன்கூட்டுக்குள்ளே போனால், ' இன்றைய வலைப்பதிவு' எங்கியோ பார்த்தமுகமா இருக்கேன்னு
கவனிச்சா.... அட. அது நாந்'தேன்'.

மக்கள்ஸ் யாராவது கவனிக்காம வுட்டுட்டா? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

ஆமாம். வாசகர் பரிந்துரைன்னு போட்டுருக்கே, நம்மை யாரு பரிந்து உரைச்சிருப்பாங்க? ஹூம்...



ச்சும்மா ஒரு விளம்பரம்தான்:-))))

35 comments:

  1. வாழ்த்துக்கள் அக்கா..
    உங்களைப் பத்தி ரொம்ப சரியா போட்டிருக்காங்க :)

    நல்ல வேளை சொன்னீங்க.. நான் தேன்கூடு பாக்கறதே இல்லை.. இனிமே அதுவும் ஒரு புக் மார்க் :)

    ReplyDelete
  2. அன்புள்ள துளசி கோபால்,
    பாராட்டுக்கள்.
    ஜவஹர்.

    ReplyDelete
  3. பூவிற்கு தேனீ வருவது பரிந்துரைத்துத் தானோ ?
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அப்படி போடுங்க! இந்தாங்க என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அக்காவுக்கு எதுக்கு விளம்பரம்... நான் இதுக்கு முன்னாடி பின்னூட்டம் எதுவும் போடலைன்னாலும் தொடர்ந்து படிச்சிட்டுதான் இருக்கேன். வந்தது வந்தேன், வாழுத்துக்கள்...

    ReplyDelete
  6. துளசியக்கா,

    வாழ்த்துக்கள்

    //அந்த அளவுக்கு அக்காவுக்கெல்லாம் அக்காவாக இணையத்தில் வலம் வருபவர்.//

    அது!

    //மற்ற வலைப்பதிவுகளையும் தவறாமல் வாசிப்பதுடன் மறக்காமல் தனது மறுமொழியை இட்டு எழுதுபவர்களை ஊக்குவிப்பதும் இவரது தனி சிறப்பு.//

    சரியாத்தான் சொல்லியிருக்காங்க...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.

    புதுபார்மோட கிளம்பி இருக்கிறோம்.

    முதன்முதலில் உங்களில் இருந்துதான் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். என் ஆசையில் மண்போட்டு விட்டது தேன்கூடு. வேறு யாரையாவதுதான் முதலைல் கலாய்க்கனும்.

    அடிக்கடி வந்துபோங்க நம்ம வீட்டாண்ட!

    ReplyDelete
  8. உற்சாகமான பின்னூட்டங்கள் கொடுத்த
    பொன்ஸ்
    ஜவஹர்
    உதயகுமார்( வெளிகண்ட நாதர்)
    மணியன்
    கோபி
    உதயகுமார்
    ஆப்பு

    நன்றி என்பதை அன்போடு சொல்லிக்கறேன்.

    நல்லா இருங்க.
    ஆப்பு

    ReplyDelete
  9. hello thulasi, I am so very happy for you.wish I can call you akka too.why not thangachi? congratulations. INTHA SIRIPPUM MAKIZHCHIYUM ENDRUM MAARATHIRUKKA VAAZHTHUKKAL.

    ReplyDelete
  10. அம்மா வாழ்த்துக்கள்.

    இன்னக்கிதான் பார்த்'தேன்'

    புன்னைகைத்'தேன்'

    வருகையை பதித்'தேன்'

    ReplyDelete
  11. வாங்க வள்ளி( வல்லி).

    உங்க வீட்டுக்குப் போய்ப் பார்த்தா, மூச்சே நின்னு போச்சு. என் இஷ்ட தெய்வம் நிக்கறார்.
    அடிக்கடி சகஸ்ரநாமம் படிக்கறதுண்டு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
    எப்படின்னாலும் கூப்புடலாம். துளசியக்கா என்றதே என் பேருன்னா நல்லா இருந்திருக்கும்.இல்லே?

    சிவமுருகன்,

    நன்றி.
    உங்க பின்னூட்டத்தைப் படித்'தேன்'
    மகிழ்ந்'தேன்'
    அதை உடனே பப்ளிஷ் செய்'தேன்'

    ReplyDelete
  12. தேன்கூட்டிலிருந்து:
    அந்த அளவுக்கு இவரது துளசிதளத்தில் ஒரு நினைவு சுனாமியே இருக்கிறது. தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதோடு மற்ற வலைப்பதிவுகளையும் தவறாமல் வாசிப்பதுடன் மறக்காமல் தனது மறுமொழியை இட்டு எழுதுபவர்களை ஊக்குவிப்பதும் இவரது தனி சிறப்பு.


    துள்சீக்கா உங்களுக்கு ஒரு பெரிய "ஓ"

    ReplyDelete
  13. துளசி
    வாழ்த்துக்கள். தேன்கூட்டில் தேன் வந்தது அதிசயமா?

    ReplyDelete
  14. வாழ்க, வளர்க! மேன்மேலும் புகழ் அடைய வாழ்த்துக்கள். என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு பதில் என் பதிவில்!

    ReplyDelete
  15. சுதர்சன், யோகன், பத்மா & சிவா,

    ரொம்ப நன்றிங்க. இப்படி எல்லாரும் வந்து
    வாழ்த்தறப்பக் கொஞ்சம் பயமாவும் இருக்கு.
    இன்னும் நல்லா எழுதணுமோன்னு ஒரு
    உணர்வு.
    முடியுமான்னு தெரியலை(-:

    ReplyDelete
  16. "துளசி
    வாழ்த்துக்கள். தேன்கூட்டில் தேன் வந்தது அதிசயமா? "
    அவங்க டூ லேட்
    வாழ்த்துக்கள் துளசிக்கா!

    ReplyDelete
  17. hello thulasi akka, ,he or she shd have mentioned that thulasiakka has so much power to move all the bloggers.you just mentioned one word and visits to my blog has gone up like anything.Thank you for this support.Like my grandson says, i would like to say AWESOME!!!!Ippave kodi pidikka ready,aarambikkalaamaa katchi?vaazhthukkal.valli

    ReplyDelete
  18. மானு,

    அடாடாடா.... இப்படியில்ல இருக்கணும்.

    //Ippave kodi pidikka ready,aarambikkalaamaa katchi?..//

    ரெண்டுபேர் சேர்ந்தவுடனெ கட்சி ஆரம்பிக்கணுமுன்னு நினைச்சீங்க பாருங்க......

    தெய்வமே... நீங்க எங்கியோ போயிடீங்க?

    ஆமாம் எதுக்குத்தான் கட்சி கட்டுறதுன்னு கிடையாதா? இல்லெ தேர்தல் திருவிழா விநோதங்களைப்
    பார்த்ததோட 'சைட் எஃபெக்ட்டா'?

    பேசாமா, கலப்பையை இறக்கு உழுவதற்குப் பாருங்க. இங்கிலிபீஸ் ரொம்பநாள் தாங்காது:-))))

    இந்த கலாட்டாலே மறந்துட்டேனே. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    அப்படியே இங்கேயும் போய்ப்பாருங்க.

    ReplyDelete
  19. மானு,

    'இறக்கி' இறக்கு வா ஆயிருச்சு(-:

    ReplyDelete
  20. dear thulasi, just wrote a blogpost for letting our children know abt you. when you have time vist the same.
    amaanga side effect thaan. !!!trying my level best
    to take the kalappai.
    thank you. valli,manu.

    ReplyDelete
  21. துள்சி அவர்களே நானும் தேன் கூட்டில் சென்று பார்த்தேன், உள்ளதை போலவே தாங்களை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய முதல் பதிவை பதித்தவுடன் தாங்கள் தான் இன் முகத்துடன் என்னை வீட்டிற்க்குள் வரவேற்றீர்கள், அத்துடன் என்னங்க "தெக்கிக்காட்டான்" பேரே வித்தியாசமா இருக்குன்னு கேட்டிருந்ததீங்க, அப்ப கேட்ட கேள்விக்கு இப்ப பதில்...

    நான் ஒரு காட்டாங்க நிஜாமாலுக்குமே :) உள்ளதை உள்ளபடி கூறினால் இந்த நாள் நமக்கு வழங்கப் படும் பெயர் "காட்டான்."

    Let it be that way...if that is the prize I pay to be honest to myself.

    வாழ்த்துக்கள் துள்சி...!

    அன்புடன்,

    தெகா.

    ReplyDelete
  22. மானு,

    துளசிச் செடியைப் பத்திச் சொன்னீங்களே. அப்படியே
    பசங்களுக்கு துளசியின் கதையைச்
    சொல்லலையா?

    ReplyDelete
  23. thulasi,Have told them in their younger days abt amma thulasi.
    and they have their google support to visit any topic. this was mainly to lead my daughter who knows thamizh to visit yr blogspot. and boast to my sons and brothers and hubby sir.
    look I got a good mentor in the net.my next post will be Thulasi 2.then will bring th e story of sankukarnan,thulasi,saligramam,nepal,kandaki river.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் யக்கோவ்...

    என்ற பயணக்கட்டுரை for Dummies படிச்சிப்போட்டு கோவத்துல நம்மளை ஒதுக்கிட்டீயள் போல இருக்குது. சரி பரவாயில்லை.

    அப்பிடியே தேன்கூடு போட்டிக்கு ஒரு ஆர்டிகிள் எடுத்து வுடுங்கக்கோவ்!!!

    ReplyDelete
  25. //ஆமாம். வாசகர் பரிந்துரைன்னு போட்டுருக்கே, நம்மை யாரு பரிந்து உரைச்சிருப்பாங்க? ஹூம்...//

    துளசியக்கா,
    பலாப்பழத்துக்கு ஈயைப் பிடிச்சு விடனுமா என்னா ;-)).

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி தெகா.

    கவனிச்சுப் பார்த்தா நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரு காட்டான் இருக்கானே:-)

    எப்பவாவது வெளிப்படுவான், குறைஞ்சபட்சம் நம்ம கண்ணுக்கே!

    ReplyDelete
  27. அட இது யாரு? குசும்ப்ஸ்ஸா?

    வாங்க வாங்க. அது என்ன பயணக்கதை ஃபார் டம்மீஸ்?
    அதி இன்னும் நான் பார்க்கலையே(-:
    இதோ போறேன்.

    ReplyDelete
  28. முத்துத்தம்பி,
    பலாப்பழமா? அவ்வளொ குண்டாவா இருக்கேன் ?:-)))

    ReplyDelete
  29. சிங்.செயகுமார்,

    நன்றி நன்றி நன்றி.

    லேட்டா வந்து 'மறுபடி' போடறதுக்கு 3 தடவை.

    ReplyDelete
  30. வணக்கம் துளசியக்கா!
    நான் தமிழ்மணத்துடன் இணைந்து கொண்ட குறுகிய காலத்தில் பதிவு நண்பர்களுடன், ஒரு தாயின் பரிவோடு உறவாடும், உங்கள் அன்பினைக் கண்ணுற்றேன்.
    பாராட்டுக்கள்
    நன்றி!

    ReplyDelete
  31. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மலைநாடரே

    ReplyDelete
  32. மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள் துளசி

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் துளசி. உங்களைப் பத்தி சரியாத்தான் போட்டிருக்காங்க.

    ReplyDelete