Friday, July 15, 2011

இடப்பெயர்ச்சி

நோட்டீஸ் போர்டு அறிவிப்பு:-)

மக்கள்ஸ்,

சண்டி கிளம்பிட்டா....... இனி நேரா நியூஸிதான். அங்கே போய் செட்டில் ஆன சில நாட்களில் மீண்டும் துளசிதளத்தில் பதிவுகள் தொடரும். அதுவரை எல்லோரும் மகிழ்ச்சியா அர்ரியர்ஸ் எல்லாத்தையும் முடிச்சுட்டு நல்ல பிள்ளைகளா வகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள் என்ற அதீத நம்பிக்கையுடன்.............

இப்படிக்கு,

உங்கள் டீச்சர்:-)

40 comments:

  1. வல்லிம்மாவை வழிமொழிகிறேன். பயணம் இனிதே அமைந்து, நல்லபடியாக செட்டில் ஆக இறையருள் துணையிருக்கட்டும்.

    ReplyDelete
  2. ஓக்கே ரீச்சர். போய்ச் சேர்ந்த விஷயத்துக்கு ஒரு தொடர் எழுதிடுங்க! :)

    நேரம் கிடைக்கும் பொழுது ரிக்கெற் எடுத்து அனுப்புங்க. அது ஒரு ட்யூ இருக்கு :)

    ReplyDelete
  3. டீச்சர்..

    பறக்குறீங்களா..?

    இதுவரைக்கும் இந்தியாவின் பெருமையை உணர்த்தும்வகையில் பல அரிய பயணக் கட்டுரைகளை எழுதித் தந்திருக்கும் உங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  4. பயணம் இனியதாய் அமையட்டும்.... உங்கள் அடுத்த பதிவுகளுக்கான காத்திருப்புடன் நாங்களும் இருக்கிறோம்.

    ReplyDelete
  5. பயணம் இனிமையா அமையட்டும்.. இந்தியாவுக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க ..... கனவுலயாவது :-)))

    ReplyDelete
  6. வாங்க வல்லி.

    நன்றிப்பா

    ReplyDelete
  7. வாங்க ராமலக்ஷ்மி.

    ஆண்டவனிடம் அப்பீல் பண்ணியாச்சுதானே? நல்லபடி பார்த்துக்க வேண்டியது இனி அவன் பொறுப்பு:-)))

    ReplyDelete
  8. வாங்க கொத்ஸ்.

    பள்ளிக்கூடம் மூடப் போறேன்னதும் ஓடி வந்து லீடர் கடமையைச் செஞ்சுட்டீங்க!!!

    நேரம் கிடைக்கும். ஆனா'அதுக்கு' நேரம் வரணும்:-)))))

    ReplyDelete
  9. வாங்க உண்மைத்தமிழன்.

    ஆஹா....... அரசு சார்பில் பாராட்டா!!!!!!!!

    ReplyDelete
  10. வாங்க ஷர்புதீன்.

    வெயிட்டிங் சமயம் அர்ரியர்ஸை முடிச்சுருங்க:-))))

    ReplyDelete
  11. வாங்க வெங்கட் நாகராஜ்.

    நன்றி.

    அடுத்த பதிவில் ஒட்டகத்தில் பயணிக்கலாம்:-))))

    ReplyDelete
  12. வாங்க அமைதிச்சாரல்.

    லொகேஷனை மாத்திக்கலாம். இதுவரை நியூஸிக்கனவு. இனிமேல் இந்தியக் கனவுதான். காணச் சொல்லிட்டார் கலாம் ஐயா!

    ReplyDelete
  13. வாங்க சுடலை முத்து.

    நன்றி.

    இன்னிக்குக் காலையில் கூட முருகனைக் கண்டுக்கிட்டுத்தான் வந்தேன்.

    நேத்து ஆடி முதல் வெள்ளி. நீங்கதான் தோசையை மிஸ் செஞ்சுட்டீங்க:-)

    ReplyDelete
  14. வாங்க பொற்கொடி.

    நன்றி:-)

    ReplyDelete
  15. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  16. பத்திரமா பயணம் செய்ங்க .

    பத்திரமா போய் சேர்ந்ததும் எப்பவாவது ஓய்விருந்தா அன்பு உலகம் வர மறந்திடாதீங்க .

    தங்களின் அனைத்து பதிவிற்கும் நன்றி சகோ .

    தங்களின் பதிவை எதிர்நோக்கி காத்திருக்கும் அன்பு உலகம் .

    M.R

    ReplyDelete
  17. நியூசி வாழ்த்துக்கள்.

    பயணங்கள் தொடரட்டும் தொடர்கின்றோம். நன்றி.

    ReplyDelete
  18. தமிழ் நாட்டிற்கு நீங்கள் வந்திருந்தபொழுது
    எங்களையும் எட்டிப்பார்த்தது
    என்றென்றும் மறக்க இயலாதது.


    சுப்பு ரத்தினம்.
    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  19. நியூசி போனவுடன் தொடங்கிடுங்க.

    ReplyDelete
  20. மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தேவா?

    ReplyDelete
  21. ரைட்டு டீச்சர் ;-)

    ReplyDelete
  22. போய் வாருங்கள் துளசி.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள். தனியாக ஒரு புத்தகம் போடும் அளவுக்கு நிறையவே பயணம் செய்து எங்களையெல்லாம் இலவசமாக டூர் அழைத்து சென்றுவிட்டீர்கள். பயணம் சிறக்கவும் மாடு மனையுடன் இனிதே செட்டில் ஆகவும் தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. இந்தியாவோ நியுசியோ உங்க எழுத்து மட்டும் கலர்புல்.பயண வாழ்த்துக்கள் டீச்சர்.

    ReplyDelete
  25. வாங்க மேனகா.

    பயணம் 'இனிதாகவே' இருந்துச்சு!!!

    நன்றிப்பா.

    ReplyDelete
  26. வாங்க மாதேவி.

    நன்றி நன்றி!

    தொடர்வதற்கு இன்னுமொரு நன்றி.

    ReplyDelete
  27. வாங்க எம் ஆர்.

    உங்கள் அன்புக்கு நன்றி.

    பத்திரமா (ஒரு வழியா)வந்து சேர்ந்துட்டோம்.

    ReplyDelete
  28. வாங்க சுப்பு ஐயா & மீனாட்சி அக்கா.

    எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

    அது மறக்கமுடியாத சந்திப்பு. உங்கள் அன்பால் என்னைத் திணற வச்சுட்டீங்களே!!!!

    மனம் முழுக்க நன்றி சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  29. வாங்க சென்னை பித்தன்.

    நீங்க்ஜ சொன்னபடி(யே) செஞ்சுட்டேன்:-))))

    ReplyDelete
  30. வாங்க இளா.

    ஆமாம்.அப்படித்தான் இருக்கு இங்கே:-)))))

    ReplyDelete
  31. வாங்க கோபி.

    ரைட்டோ ரைட்டு, டபுள் ரைட்டு:-))))

    ReplyDelete
  32. வாங்க குமார்.

    அடிக்கடி உங்களை நினைச்சுக்கறோம். நண்பர் அங்கே உங்க எல் அண்ட் டி யில் சேர்ந்துருக்கார்!

    ReplyDelete
  33. வாங்க பிரகாசம்.

    நீங்கள் எல்லாம் கூட வரும் தெம்பில்தான் பயணங்கள் எழுதியாறது.

    மாடு மனைன்னு சரியாச் சொல்லிடீங்க.

    இங்கே வந்த புதுசில் மகளை அவள் வகுப்புலே எல்லோரும் மா....டுன்னுதான் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க!!

    மதுன்னு சொல்ல அவுங்க நாக்குகளைப் பழக்குனது தனிக்கதை:-)

    ReplyDelete
  34. வாங்க ராஜ நடராஜன்.

    கலர்(ஃபுல்)ன்னு சொன்னதுகூட சரிதான்:-) விவரம், வரும் பதிவுகளில்!

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  35. தகவல் கொடுத்த கைடு காதுலே வெள்ளையும் சிகப்புமாக் கல்லுவச்ச அழகான தங்கக்கம்மல் போட்டுருந்தார். நிறைய இடங்களில் இப்படி ஆண்கள் கம்மல் போட்டுருப்பதைப் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. ஐ மீன் கம்மல்:-))))//

    நாங்களும் அந்தக்கமமல்களை ரொம்ப ரசித்து சிலாகித்தோம்.
    நினைவுகளை மீட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  36. வாங்க இராஜராஜேஸ்வரி.

    ரசிப்புக்கும் வருகைக்கும் நன்றிகள்.

    மீண்டும் வருக.

    ReplyDelete