யார்கிட்டேயாவது பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லிக் கொடுக்கலாமுன்னா அனைத்து தேவர்களும் கயிறு இழுத்தாகவேண்டிய நிலமை. சுத்துமுத்தும் பார்க்கறாங்க.கண்ணுலே பட்டார் ததீசி முனிவர். நல்ல குணநலன்கள் கொண்டவர். அவர்கிட்டே போய், நாங்க 'வரும்வரை' இதையெல்லாம் பார்த்துக்குங்கன்னு சொல்லிக் கொடுத்து வச்சுட்டுக் கடையப்போனாங்க.
அமுதம் வந்தது. அசுரர்களுக்கு, அவர்கள் பங்கைக் கொடுக்காமல் 'ஏமாத்திட்டு' மோகினி தேவர்கள் எல்லோருக்கும் விளம்பினாள். ஒரே கொண்டாட்டம். இனி அழிவே இல்லை. போதாததுக்கு உண்ட மயக்கம். எல்லோரும் கிளம்பிப்போயிட்டாங்க. கைகள் காலியா இருக்கேன்னு எப்பவாவது நினைவு வந்தாலும், எதுக்கு வீணா சுமக்கணும். அமிர்தம் தின்ன நமக்கு இனி யாராலும் ஆபத்து இல்லையேன்னு ஒரு தோணல்.
ததீசி இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கார். யாரும் வந்து வாங்கிக்கும் வழியைக் காணோம். தன்னுடைய கடமைகளான தவம், யாகம் இதையெல்லாம் செய்யாமல் முனிவர்ன்னு பெயர் வச்சுக்கிட்டு எத்தனைநாள்தான் காவல்காரனாக் காத்துக்கிட்டு இருப்பார்? அங்கேயே போட்டுட்டுப் போகவும் மனசு வரலை. அசுரர்கள் கையில் ஆப்ட்டுக்கிட்டா? உக்கார்ந்து யோசிச்சார். எல்லாத்தையும் பொடி செஞ்சு மாத்திரைகளா மாற்றி மூணு வேளைக்கு முழுங்கிட்டார். அது எல்லாம் அவர் எலும்புக்குள்ளே போய் ஸ்ட்ராங்கா உக்காந்துக்கிச்சு. முதுகெலும்புக்கு எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெந்த்!!!
அசுரர்கள் கூட்டத்தில் விருத்திகாசுரன் என்பவன் பயங்கர பலத்தோடு விருத்தியடைஞ்சுக்கிட்டு இருக்கான். இவன் அசுர குருவான துவஷ்டாவின் ஏவல் சக்தி. இவன் இந்திரன் மீது படையெடுத்து வந்துட்டான். ஆயுதம் ஒன்னும் கையில் இல்லாத நிலையில் அரக்கனை எதிர்கொள்ள முடியாமல் தேவர்களின் அரசன் இந்திரன் ஓடி ஒளிஞ்சுக்கிட்டான். வழக்கம்போல் தேவர்கள் விஷ்ணுவிடம் போய் குய்யோ முறையோன்னு கூவி அழ, மகாவிஷ்ணு சொல்றார், எல்லோரும் ஆயுதத்தை முனிவர் கிட்டே கொடுத்துட்டு ஜாலியா இத்தனைநாள் இருந்தீங்களே...... ஆபத்து காலத்துலே இதெல்லாம் வேணுமேன்னு யாருக்காவது தோணுச்சா?
வருமுன் காக்கத்தெரியாதவங்களுக்கு இப்படித்தான் ஆகுமுன்னு ரெண்டு வார்த்தை திட்டிட்டு, போங்க...போயி அந்த ததீசி முனிவரைப்போய்ப் பாருங்க. ஆனால் அவரும்தான் எம்மாநாள் காத்துருப்பார்? எல்லாத்தையும் பொடிபண்ணி முழுங்கிட்டார்'னார்.
தேவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கி 'ஓ'ன்னு விம்மி அழறாங்க. விஷ்ணுவுக்குப் பாவமாப்போச்சு. முனிவரின் முதுகெலும்பு கிடைச்சால் அதுலே ஒரு வஜ்ராயுதம் செஞ்சு அதை வச்சுச் சண்டை போட்டால் விருத்திகாசுரனை ஜெயிக்கலாமுன்னு ஐடியாக் கொடுத்தார். ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இந்திரனுக்கு சேதி போச்சு. முனிவரைப் பார்க்கக் கிளம்பிப் போனான்.
ஆயுர்வேத மருத்துவமனைக்கான நுழைவு வளைவில் சுவர்களில் புடைப்புச்சித்திரங்களா ஒரு மனிதன் வாழ்க்கை பிறந்தது முதல் மரணம் வரை! அவனுக்கு உடம்பு சரி இல்லைன்னு டாக்டர் வந்து பார்க்கிறார்!
மிளகு சைஸில் தங்கத்துலே கட்டுன ருத்திராட்ச மாலை ஒன்னு ரொம்ப நல்லாவே இருக்கு. ரொம்பப் 'புளிப்பு' வேணாமுன்னு கோபால் மனசில் பால் வார்த்தேன். முப்பதாயிரம் ஸேவிங்க்ஸ்.
உங்களுக்கு ஒரு நல்ல பரிசு தர்றோமுன்னு ஒரு ஆறுமுகம் ருத்திராட்சம் காமிச்சார். இன்னொரு கிண்ணத்தில் நாலு முகமும் வச்சுருக்காங்க. கடைசியில் இது ஒன்னு அது ஒன்னுன்னு டீல் ஓக்கே:-) ஏற்கெனவே கோகர்ணத்தில் ஒரு அஞ்சு முகம் கிடைச்சது. கலெக்ஷன் ஆரம்பிக்கத்தான் வேணும். அர்த்தசந்திர ருத்திராட்சம் பார்த்தேன். உத்தரகண்ட் மாநில அரசு பரிந்துரைக்கும் கடைகளில் இதுவும் ஒன்னு.
இதுக்குப்பிறகு நிறைய கடைகளில் ஒரு முக ருத்திராட்சம் பார்வைக்கு இருக்கு என்ற விளம்பர போர்டுகள் வச்சுருப்பதைப் பார்த்தேன். ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்திராட்ச வகைகள் இங்கெல்லாம் கிடைக்குது.
'எதாவது வாங்குனீங்களா?'ன்னார் கௌஷலேந்த்ர சிங். எத்தனை பெர்ஸண்ட் உங்களுக்குன்னு கேட்டேன்:-) வெறும் ரெண்டு தானாம். சரி. ரெண்டுன்னா ரெண்டு. 'அறுபத்தியாறு ரூபாயை விட்டுடாதீங்க'ன்னேன்:-)
கங்கைப் படித்துறைகளில் கங்கையைத் தெளிச்சுக் கோதுமைமாவைப் பிசைஞ்சு சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு தொன்னையில் போட்டு அஞ்சு ரூபான்னு விக்கறாங்க. பசுமாட்டுக் கன்றுகள் அங்கங்கே நம்மை எதிர்பார்த்து நிக்குதுகள். இவை விற்பவர்களின் சொந்தக் கன்றுகளாத்தான் இருக்கணும். கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்.
மறுபடி சிவானந்தா ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைஞ்சு பத்ரிநாத் சாலைக்கு வந்தோம். நவீனக் கருவிகள் எல்லாம் உள்ள மருத்துவமனையை நடத்துறாங்க. எக்ஸ்ரே ரூம் எல்லாம் இருக்கு. ஆன்மீகப்பயணமா இல்லாம சும்மா மலை ஏறுவது, கங்கையின் வேகத்தோடு போகும் படகுச்சவாரி (ராஃப்டிங்) இப்படி பொழுதுபோக்கு விஷயங்களுக்காகவும் ஏராளமான மக்கள் வந்து கூடும் இடம் இந்த ரிஷிகேஷ். பல வெளிநாட்டுக்காரர்களின் நடமாட்டங்களையும் பார்க்கலாம்.
இப்போ ராமர் பாலம்தான் பார்த்திருக்கோம். இன்னும் லக்ஷ்மணன்பாலம், த்ரிவேணி காட், பரத் மந்திர் எல்லாம் போகணும். வண்டி இருந்து என்ன பயன்? எதெது எங்கேன்னு சொல்ல உள்ளூர் ஆள் வேணாமா? வழிகாட்டுன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்ப இருந்த கைடையே 'இந்த இடங்கள் எல்லாம் வந்து காமிக்க முடியுமா'ன்னதுக்கு சம்மதிச்சுட்டார்.
தொடரும்.................:)