முப்பது ரூபாய்ன்னார். முதலில் ஒன்னு வாங்கிப் பார்த்துட்டு நல்லா இருந்தால் இன்னொன்னு வாங்கிக்கலாம். சிங்கையில் வாங்குவது போல இங்கே இந்தியாவில் நம்பி வாங்க முடியலை பலசமயம் கரிப்போ கரிப்பு.
பேப்பர் டம்ப்ளர் எடுத்து சேம்பரில் இருந்து குழாயைத்திறந்து ரொப்பறார். பைப் லைனிலா இளநீர் வருது. ஃப்ரஷா இங்கே இருக்கும் இளநீரை வெட்டித் தான்னதும் கத்தியின்றி ரத்தமின்றி மெஷினில் வச்சு கைப்பிடியை அமுக்குனதும் 'சதக்னு இளநீரில் ஓட்டை. அட! நல்லா இருக்கே!
டெக்னாலஜி இஸ் கான் ஃபார் டூ மச்!!!
மாடிக்குப் போனால் எல்லா தளமும் காலியாக் கிடக்கு. ரெஸ்ட்டாரண்டும் மூடி இருக்கு. எஸ்கலேட்டர், லிஃப்ட் எல்லாம் வச்சு அருமையா இருக்கும் மாலில் கடைகளே இல்லை. ஒருவேளை 'மால்' அதிகம் கேக்கறாங்களோ என்னவோ? விடியா மூஞ்சு கதை! கீழ்தளத்துலே ஒரு மெக்டோனால்ட்ஸ்.. அங்கே போய் சிப்ஸும் பர்கரும் வாங்கிக்கிட்டோம். கீழ்தளத்துலேயே கைவினைப்பொருட்கள் (எல்லாம் பளிங்குச்சாமான்கள்) கடை ஒன்னு. ரெண்டு யானை கிடைச்சது.
இன்னும் அரைநாள் பாக்கி.. த டே ஈஸ் ஸோ யங்! ஒரு முப்பத்தியெட்டு கிமீ தூரத்தில் ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி இருக்கு. போயிட்டு வந்துறலாமுன்னு கிளம்பினோம். போகும் வழியில் இன்னொரு யானை எதிர்கொண்டு போச்சு. கடைவீதிகளைத் தாண்டும்போது உடுபி ஹொடேல் போர்டு பார்த்து வச்சுக்கிட்டேன். நகர எல்லையைக்கடந்து கோட்டை வாசலுக்குப்போக ஒரு மணி நேரம் ஆச்சு.
எல்லா வண்டிகளையும் வழி மறிச்சு கார்பார்க்குலே கொண்டுபோய் விட்டுடறாங்க. அங்கே பலத்த வரவேற்பு. 'மேலே மலை ஏறணும். நாங்களே கொண்டுபோய் எல்லாத்தையும் காமிச்சுக் கூட்டி வந்துருவோம்'
"வேணாம். நாங்களே பார்த்துக்கறோம். அதான் பஸ் ஒன்னு மேலே போகுமுன்னு போர்டு இருக்கே. அஞ்சு ரூபாதான் அதுக்கு. அதுலே போறோம்."
"பஸ் நிறைஞ்சால்தான் எடுப்பாங்க. அதிலும் அங்கிருந்து திரும்பிவர பஸ் சிலசமயம் கிடைக்காது. 'மலை'யில் இருந்து நடந்து வரணும்.." விடாமப் பின் தொடர்ந்தார். 800 ரூ சார்ஜ். பேரம் பேசி முன்னூறாக்குனோம். ஒரு செல்ஃபோன் கால். எங்கிருந்தோ ஆட்டோ ஒன்னு வந்து நம்முன்னால் நிக்குது. அதுலே வந்தவருக்கு அசைன்மெண்ட் கொடுத்தார் ஏஜண்ட்.
நாலைஞ்சு நிமிசத்துலே 'மலை' ஏறியாச்சு. அங்கே இன்னும் உசரத்துலே கோட்டை மதிலுடன் நிக்குது ஜமா மசூதி. சரிவுப்பாதையில் மேலே ஏறிப்போறோம். கைடுக்கு கால் சரியில்லை. ஒரு பாதம் வளைஞ்சு இருந்தாலும் விந்திவிந்தி வேகமா நடக்கறார்.
இந்தப்பக்கம் ஃபடே(ஹ்)பூர் அந்தப்பக்கம் ஸிக்ரி. ரெண்டுக்கும் எதிரில் இருக்கும் குன்றின்மேல் இருக்கும் கோட்டையின் தெற்கு வாசலில் நின்னுக்கிட்டு கையை நீட்டிக் காட்டறார் மொஹம்மத். நமக்காக இவரைத்தான் அனுப்பினார் அடிவாரத்துலே இருந்த ஏஜண்ட்.
ஆமாம் பாஸ். இந்த ஆளுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ். அவன் அவனுக்குத் தெரிஞ்ச ஆள்கிட்டே சொல்லி அவனோட ஆள் மூலம் வேலையை முடிச்சுருவான் பாஸ்.
நாம் மசூதிக்கோட்டைக்குள் நுழைஞ்சது கிழக்கு வாசல் வழியாக. இதுதான் அரசகுடும்பம் வரும் வழியாம். (அது ஏன்னு அப்புறம் தெரிஞ்சது) மேற்குப்பக்கம் வெராந்தாக் கட்டிடமும் வெறும் சுவரும் தான். இந்த திசை நோக்கித்தான் கும்பிடுவாங்க. வடக்குப் பக்கம் நீண்ட வெராந்தாக்களுடன் உள்ளே உள்ளே போகும் கூடங்கள் இடதுபுறம். வலதுபுறம் தரை முழுக்க சமாதிகள். சிஷ்டி குடும்பத்தினருக்கு மட்டுமே இங்கே அடக்கம் செய்யும் உரிமை.
அக்பருக்கு ஏராளமான மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை. இந்த மகானை வழிபட்டு ஆசிகள் வாங்குனதும் மனைவி ஜோதாபாய்க்கு பிறந்த பிள்ளைதான் ஸலீம் ஜஹாங்கீர். அக்பருடைய பெரிய சாம்ராஜ்யத்துக்கு வாரிசு என்று ஜஹா...ங்கீர்னு பெயர். குருவின் ஆசியோடு பிறந்த பிள்ளை என்றதால் ஸலீமுன்னு குருவின் பெயரையும் சேர்த்து வச்சாராம்.

சின்னதும் பெருசுமா தரைப்பகுதியில் இருக்கும் குடும்ப சமாதிகளைக் கடந்து உள்ளே போறோம். ஒரு இடத்தில் படிக்கட்டுகள் கீழே இறங்கிப்போகுது. சுரங்கப்பாதை. இங்கே இருந்து ஆக்ரா கோட்டைக்குள் போய்ச் சேருது. இதன் வழியாத்தான் அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க ஆக்ராவுக்குக் கொண்டு போனாங்களாம்.
முற்றத்தில் ஒரு மரத்தைச்சுத்தி எழுப்பி இருந்த மேடையில் பூஜைப்பொருட்களை வச்சு விக்கறாங்க. கலர் கலரா மெல்லிய துணியில் சரிகை வச்சுருக்கு. ஸலீம் சிஷ்டி தர்காவுக்குள் வெறுங்கையாப் போகக்கூடாதுன்னு மொகம்மத் ஹிண்ட் கொடுக்கறார். உண்டியலில் காசு போடலாமான்னா...... ரூபாய்களை போடக்கூடாதாம். என்ன வம்பாப் போச்சு...உள்ளே போகலாமா வேணாமான்னு கோபாலுக்கு யோசனை.
மனுசர்களின் மனங்களைப் படிச்ச மொஹம்மத் சொல்றார்........
"ரொம்ப சக்தி வாய்ந்த தர்கா இது. வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும். ஒவ்வொருத்தருக்கும் மூணு வேண்டுதல்கள் பலிக்கும். என்ன வேண்டுனோமுன்னு யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்பது கண்டிஷன். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா மூணு வரங்கள் கேக்கலாம். இந்த நிறங்கள் ஒவ்வொன்னும் ஒரு பிரிவுக்கான தர்ம கைங்கர்யம். விதவைகள் மறு வாழ்வு, ஏழைக் குழந்தைகள் படிப்பு, ஏழைப்பெண்கள் திருமண உதவின்னு வச்சுருக்காங்க."
ஏழைப்பெண்கள் திருமண உதவிக்கு இருக்கட்டுமுன்னு சிகப்புத் துணி வாங்கினோம். கூடவே ரெண்டு சிகப்பு மஞ்சள் நூல்கள் இருக்கு அதுலே. வேண்டுதலை மனசில் சொல்லிட்டு அந்தக் கயிறை அங்கே இருக்கும் சன்னலில் கட்டி விடணுமாம்.
இங்கே இது ஒரு ரிங்போல் செயல்படுதுபோல. வியாபாரிகளுக்கும் கைடுகளுக்கும் தர்காவில் பூஜை செய்பவர்களுக்கும் ஒரு உள்த்தொடர்பு இருக்கு. நாம் எடுத்த துணிக்கு 1100 ரூபாய் கட்டணம். 'கடைசி நிமிட்லே கவுத்துட்டியே பாவி'ன்னு, என்னை ஒரு பார்வை பார்த்தார் கோபால். 'போயிட்டுப்போகுது விடுங்க. ஏழைப்பெண்கள் கல்யாணம் சம்பந்தப்பட்டது. கணக்குப் பார்க்காதீங்க'ன்னு பார்வையால் பதில் சொன்னேன். இந்த முப்பத்தி ஆறரை ஆண்டு வாழ்க்கையில் பார்வைகளுக்குப் பொருள் துல்லியமாப் புரிஞ்சுருது.
சரிகைத் துணியை விரிச்சு சமாதி மேல் போர்த்தணும். பூஜை செய்யும் நபர் உதவி செய்யறார். கண்மூடிப் பிரார்த்திச்சுக் கயிறுகளை ஜன்னலில் கட்டுனோம். சமாதி மேல் பலவித நிறத் துணிகள் நிறைஞ்சுருக்கு. சலவைக்கல்லில் நவரத்தினக் கற்கள் பதிச்சுருக்காங்க. முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட துணியால் ஆன விதானம்.
இன்னும் சில கூடங்களின் சுவர்களில் வெவ்வேற ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டப் பல நிறங்களில் உள்ள பளிங்குக்கற்களால் பூவேலைகள் அமைச்சுருக்காங்க. இன்லே ஒர்க். அவையெல்லாம் பழுதுபட்டால் மீண்டும் புதுப்பிக்கும் வேலை செய்ய ஒரு ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் இந்த படே(ஹ்)பூர் ஸிக்ரியில் இப்போதும் வசிக்கிறாங்களாம்.
பதினைஞ்சு வருசம் கஷ்டப்பட்டுக் கட்டுன இந்தக் கோட்டையையும் சுற்றுப்புற அரண்மனைகளையும், எண்ணிப் பதினாலு வருசங்கள் மட்டுமே தலைநகராக வச்சுருந்தவுங்க தண்ணீர் கஷ்டத்தால் இந்த இடத்தைவிட்டு மறுபடி ஆக்ராவுக்கே போயிட்டாங்க. யமுனை இருக்கே!.
இந்த முப்பது மீட்டர் அகல வாசலுக்கு பிரமாண்டமான மரக்கதவுகள் ரெண்டு. கதவுகளிலும், குதிரை லாடங்களை ஏராளமா அடிச்சு வச்சுருக்காங்க. அதிர்ஷ்டம்!!
இந்த புலந்த் தர்வாஸா (வாசக்) கட்டிடத்துலே மார்பிள் எழுத்துக்களால் குரானின் சில பகுதிகள் பொறிக்கப்பட்டிருக்கு. கூடவே இயேசு கிறிஸ்தின் உபதேசங்கள் சிலதும்! அக்பருடைய பரந்த மனப்பான்மையையும், மத நல்லிணக்கத்தைக் காட்டும் வகையிலும் அமைஞ்சுருக்கு. பகவத் கீதையில் இருந்து ஒரு வரியும் சேர்த்துருந்தா நோக்கம் முழுமையா நிறைவேறி இருக்கும்.
பலவிதப் பழங்களை அடுக்கி வச்சு ஃப்ரூட் ஸாலட் செஞ்சு விக்கறாங்க சிலர். ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி படங்கள், புத்தகங்கள் விற்கும் சிறுவர்கள் பயணிகளைப் பிச்சுப்பிடுங்கறாங்க. ஆரம்ப விலையில் இருந்து சட்னு அதலபாதாலத்துக்குப் போகுது. நாம்தான் ஏற்கெனவே மதுராவில் வாங்கிட்டோமே, ஹோம் ஒர்க் செய்ய.
இந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது கொஞ்ச தூரத்தில் ஜோதாபாய் மாளிகை தெரியுது. ஆனால் அங்கே சிஷ்டியின் வம்சத்தினர் இப்போ வசிப்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையாம்.
ஆட்டோவில் ஏத்திக் கீழே கொண்டுவந்து விட்டுட்டு காசை வாங்கிக்கிட்டார் மொஹம்மத். ஒன்னரை மணி நேரம் ஆகி இருக்கு.
ஆக்ராவுக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். கடைவீதிக்குள் பாதிவழியில் இருக்கும்போது ட்ராஃபிக் போலீஸ் நம்ம வண்டியை ஓரங்கட்டுச்சு. " வண்டி யாருது? கிஸ்கா காடி ஹை?" எங்களுதுதான். பேப்பர்ஸ் எல்லாம் இருக்கா? இருக்கு. அப்ப நீ ஒன்வே யிலே வந்துட்டே. இல்லையே எங்களுக்கு முன்னால் வண்டி போகுது. பின்னாலும் வண்டிகள் வருது.
பேப்பர்ஸ் காமின்னதும் எடுத்துக் காமிச்ச ப்ரதீப்பின் கையில் இருந்து 'லபக்'னு பிடுங்கிட்டு போறார் போலீஸ். ஐயோ ஐயோன்னு ப்ரதீப் ஓட, எனக்கு எரிச்சலா இருக்கு. அஞ்சு நிமிசத்துக்கும் மேல் ஆச்சு இன்னும் ஆளைக் காணோமேன்னு கோபால் போய் பார்த்தா ரெண்டாயிரம் கொடுன்னு பேரம் ஆரம்பிச்சு ரெண்டு நூறில் படிஞ்சது. அடாவடி போலீஸ்.
ட்ரைவர் மட்டும் போயிருந்தால் அம்பது, நூறோடு முடிஞ்சுக்கும். நான் போனதால் 'லஞ்ச' விலை ஏத்திட்டான்றார் கோபால். மதிப்பு கூடிப்போச்சோ;-)))))
இதுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் சொன்னதுபோல், இது இதுக்கு இவ்வளவுன்னு அஃபீஸியலா பட்டியல் ஒன்னு போடவேணுங்கறது.
காலையில் அம்பது ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு. டின்னருக்கு அம்பது எப்படிப்போதும்? அதான்........
ஆக்ச்சுவலா அது ஒன்வே இல்லை. வெளியூர் வண்டின்னதும் அதிகாரம் காமிக்கிறாங்க. கேஸ் புக் பண்ணிக்கோன்னா..... யாராலே இதுக்காக அங்கே இன்னொருமுறை போ ஆஜராகமுடியும்? தொலையட்டும் சனியன்னு லஞ்சம் கொடுக்க வேண்டித்தான் இருக்கு. மக்களுடைய இயலாமையைக் காசாக்கத் தெரிஞ்சுக்கிட்டாங்க.
இந்தியா முழுக்க வண்டி ரெஜிஸ்ட்ரேஷனுக்கு நம்பர் மட்டும் கொடுக்கலாம். முன்னாலே எந்த ஸ்டேட்ன்னு ரெண்டு எழுத்து போடுவதால் தானே இந்தத் தொல்லை?
அப்படி ஒரு விதி கொண்டுவந்தால் போலீஸே போராட்டம் நடத்துமோ என்னவோ? ஒரு ரெண்டு மணிநேர உண்ணாவிரதம்......
மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி நேரே வீட்டுக்கே போயிடலாம். பத்துமணி நேர ட்ரைவிங். முடியுமான்னு ப்ரதீப்பிடம் கேட்டால் பிரச்சனை இல்லை. நான் பதினெட்டு மணிநேரம் ட்ரைவ் செஞ்சு ஆமடாவாத் போயிருக்கேன்னார்.
மறுநாள் காலையில் தொண்டை பயங்கரவலி. பல்தேய்க்கும்போது தொண்டையில் இருந்து ரத்தமா வருது. கோபாலுக்குச் சொல்லலை. பயந்துருவார் மனுசர். கையில் இருக்கும் மாத்திரையைப் போட்டுக்கிட்டு எதிரில் இருந்த மெக்டோனால்ட்ஸ்லே காஃபிக்குப் போனா 'அதிகாலை'ப் பத்துமணிக்குத்தான் திறப்பாங்களாம்.
கிளம்பிடலாம். போகும் வழியில் நேத்து பார்த்துவச்ச உடுபி இருக்கே! எட்டுமணிக்குத்தான் டிஃபன் கிடைக்கும். கறாராச் சொன்னார் பணியில் இருந்தவர். இப்போ ஏழே முக்கால். காஃபி போதும். அது வந்து குடிக்க ஆரம்பிக்கும்போது மணி எட்டு. இட்லி வடை கிடைச்சது.
மதுரா வழியிலேயே வந்து தில்லிக்குள் நுழையாம ரிங் ரோடில் போய் ஊரெல்லையைத் தாண்டுனோம். மயூர்விஹார் போகும் சாலை, நிகம்போத் காட் எல்லாம் கண்ணில் பட்டபோது சம்பந்தப்பட்டப் பதிவர்கள் நினைவுக்கு வந்தாங்க.
பகல் உணவுக்கு ஹைவேயில் சோனிப்பெட் ஹவேலிக்குள் நுழைஞ்சுட்டு, வீடுவந்து சேர்ந்தப்ப மணி மாலை ஆறரை. சரியாப் பதினொன்னரை மணி ஆகி இருக்கு. வெரி லாங் ட்ரைவ்:(
மதுரா ஆக்ரா பயணம் முடிஞ்சது.
கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உங்களுக்கு லீவு விட்டாச்சு! புதுவருசத்தில் சந்திப்போம்.
நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
டீச்சர்.