'இங்கே' எல்லாம் ஓசைப்படாமல் நடக்குது . கொறைஞ்சபட்சம் ஒரு சர்ச்சுக்குப் போய்வரணுமுன்னு நினைச்சது(ம்) மறந்தே போச்சு வேறொரு கொண்டாட்டத்துலே முழுகிட்டதால்.
ஒரு இசைநிகழ்ச்சிக்குப்போயிட்டு வரும்வழியில் கோபாலுக்கு ஒரே கழுத்துவலி (அவ்வளவாத் தலையைக்கூட ஆட்டலையே!!!! இன்னிக்கு அங்கே நானும் ரொம்பக் கொஞ்சமாத்தானே பேசினேன். ) உடம்பு சரியில்லைன்னா இவருக்கு ஏற்ற சிகிச்சை ஒன்னு இருக்கு. பாதி இல்லே முக்கால்வாசி வியாதிகள் இவருக்கு டாக்குட்டர் முகத்தைப் பார்த்ததும் போயிரும்.. மலர் ஹாஸ்பிடலுக்கான்னு கேட்டேன். வீட்டுப் பத்திரத்தை நியூஸியில் விட்டுட்டுவந்த கவலை எனக்கு! ம்ம்ம்ன்னு என்னவோ சொல்ல ஆரம்பிச்சவர், சாதாரண டாக்டர் கிடைச்சால் போதுன்னார். ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)
நம்ம டிரைவர்கிட்டே எங்கியாவது டாக்டர் பார்த்தா நிறுத்துங்கன்னு சொல்லி வாய் மூடலை ஒரு டாக்டர் போர்டு கிடைச்சுருச்சு. எதிரும்புதிருமாப் போட்டுருந்த ரெண்டு நீள பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். நாலுக்கு எட்டுன்னு ஒரு அறை. ஒரு மேசைமேல் துளி இடம் இல்லாம விதவிதமான ப்ளாஸ்டிக் டப்பாக்கள். எனக்கென்னமோ சட்னு பான்பராக் விற்பவர்தான் நினைவுக்கு வந்தார். காத்துருந்தவங்க அவுங்களே யாருக்குபின் யார்ன்னு வரிசைப்படுத்திக்கிட்டு உள்ளே ( நான் இருந்த இடத்திலிருந்து ரெண்டு எட்டு) போவதும், அங்கே இருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உக்காருவதுமா.... ஒரு ஊசி, நாலு வார்த்தை, காசு கைமாறுவது.
ரொம்ப வருசங்களுக்குமுன்னே நாங்க கேரளாவில் இருந்தப்போ, இவருக்கு மூக்கில் புண். (சிகரெட்டை ஞாபகமறதியா தீ இருக்கும் பக்கம் மூக்கருகில் வச்சுச் சுட்டுக்கிட்டாரோ? அப்பெல்லாம் புகைவலி பழக்கம் வேற.அதை ஒழிக்க நான் பட்டபாடு..... அப்புறம் கதைகள் 1500 இல் சொல்லலாம்) கடைவீதிக்குப் போகும்போது அங்கே இருந்த ஒரு மருந்துக்கடையில் போய் நின்னோம்.
"எந்தா?"
'ம்ஹூக்குலே ஹுண்ணு"
ஏறிட்டுப் பார்த்தக் கடைக்காரர், ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து
" இந்தா இது கழிச்சோ. ....ரண்டு ருபெ"
இந்தச் சம்பவம் இப்போ ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் நினைவுக்கு வந்து.. புன்முறுவல். ஓசைப்படாமல் அவர் 'ம்ஹூக்குலே ஹுண்ணு' ஜாடையில் சொல்ல நான் 'ரண்டு ருபெ' :-))))
(சும்மாவா சொன்னான் சீயக்காப்பொடி!! (இதுவும் 1500 இல் பார்க்கலாம்)
எங்கள் முறை வந்ததும் மேசையின் அருகில் நின்னு பார்த்தேன். என் கவலையெல்லாம் சிரிஞ்சி பற்றித்தான். மேசையின் அடுத்த ஓரத்தில் சின்னக் குன்றாய் பயன்படுத்திய சிரிஞ்சிகள். நோய் விசாரணை ஆச்சு. ஹெட் கோல்ட் இருப்பதால் வந்த வலி(யாம். இதைத்தானே ரெண்டுநாளா நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்) ஊசி போட்டுக்குங்கன்னு புதுசா ஒரு சிரிஞ்சி எடுத்தார். அப்பாடா..... கூடவே 3, 2 ன்னு ரெண்டுவகை மாத்திரைகள். முப்பது ரூபாய்கள். (உடனே மகளுக்கு விவரம் சொல்லணுமுன்னு துடிப்பா இருந்தேன். டெலிபதி:கெஸ் வாட்? வாட்? டாட் இஸ் ஸிக். ஓ நோ... பீன் டு தெ டாக்.? எஸ். டூ யூ நோ ஹௌமச் ஹீ சார்ஜ்ட்? நோ ஐடியா.... அ டாலர். வாவ்)
கோபாலுக்கு நோய் முக்கால்வாசி குணமாகி முகம் தெளிஞ்சுருச்சு. அதான் டாக்குட்டரைப் பார்த்தாச்சே!
"என்ன மேடம் இப்படிச் சொல்லீட்டீங்க?"
"இல்லையா பின்னே. உங்களுக்குன்னு ஒரு 'பேட் ரெப்யூட்டேஷன்' இருக்கேப்பா."
"அப்படி இல்லை மேடம். ஏர்ப்போர்ட், செண்ட்ரல் இந்த ரெண்டு இடத்துலே இருக்கறவங்கதான் தகராறு செய்வாங்க. அதாலேதான் மொத்தப்பேருக்கும்......"
இந்த ஆட்டோக்களைப் பற்றிய ஒரு விஷயம் ஹிந்துவில் காணக்கிடைச்சது. சென்னையில் மட்டும் 48,350 ஆட்டோகள் ஓடுதாம். ஆட்டோகளின் எண்ணிக்கையைக் கண்ட்ரோல் செய்யறதுக்கு பர்மிட் முறை வந்துருக்கு வயசு 23 முதல் 45 வரைக்குள்ளே இருக்கணும். கொறைஞ்சது எட்டாங்கிளாஸ் படிச்சுருக்கணும். 375 ரூபாய் கட்டணம் கட்டணும் பர்மிட் விண்ணப்பத்துக்கு. இவை அரசாங்கம் நியமிச்ச விதிகள்.
இப்போ 20 வருசமா. பர்மிட் வந்ததும் அதோட அக்காவும் கூடவே வந்து சேர்ந்துக்கிடணுமில்லை. ஊஊஊஊழல். இந்த முன்னூத்தி எழுபத்தியஞ்சு வீங்கிப்போய் இப்போ மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!
சாதாரண ஆட்டோ ஒட்டிகளுக்கு இவ்வளோ ஐவேஜ் ஏது? வட்டிக்கு விடும் ஆட்கள் வேறெத்துக்கு இருக்காங்க? 12 சதமானம் கூட்டு வட்டி. மாசத்தவணை அஞ்சு இல்லை ஆறாயிரம் வரை ஆகுமாம். இதுக்குமே தினம் 200 எடுத்து வைக்கணும். பெட்ரோல் செலவு வேற இருக்கு. சங்கிலியைப் புடிச்சுக்கிட்டேப் போய்க் கடைசியில் பார்த்தால் காசு தின்னும் மக்கள் ....... ஃபைனான்சியர்களும் பர்மிட் வச்சுருக்கும் ஆட்டோ ஓனர்களும். இந்த ஓனர்களில் பலர் *** துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்(??)கள். இதைப் பத்தி இன்னும் கொஞ்சம்விவரம் இருக்கு. வேறொருநாள் பார்ப்போம்.
அதே இடத்தில் கீழ் வரிசையில் ஒரு சங்கிலியில் பூட்டுகளாத் தொங்கவிட்டுருக்காங்க. இது என்னவகை பிரார்த்தனைன்னு தெரியலை. மெழுகுவத்தி ஏற்றும் இடத்தில் நம்ம ஆள் இருக்கார்.
இங்கேயும் நேட்டிவிட்டி ஸீன்ஸ் ரெண்டு இடத்துலே இருக்கு. அந்த பெரிய வளாகத்துலே இயேசுவின் சரிதை முழுசும் பத்துப்பனிரெண்டு ஸீன்களாக் காட்சியாகக் கண்ணாடிக்கூண்டுலே இருக்கு. அதையெல்லாம் அன்னிக்குத்தான் பார்த்தேன்.
எல்லாமே ஒன்னு. அப்படித்தான் இருக்கணும். இருக்கு.
இதுதான் கடைசிப் பதிவு இந்த வருசத்துக்கு.
அனைவருக்கும் ஆங்கிலப் (??) புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.