மறுநாள் காலை ஏழுமணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டுப்போனார், நாங்க அறைக்குப் போனோம். கதவின் குமிழைத் திருப்புனதும் திறந்துருச்சு. பூட்டாமலா காலையில் கிளம்பி இருக்கோம்? இவரைக்கேட்டால் இழுத்து மூடினேன். ஆனால் குமிழைத் திருப்பிப் பார்க்கலைன்றார். உலகமெல்லாம் சுத்துற ஆளு கதவைப் பூட்டலைன்னா எப்படி? ஆஹா.... புரிஞ்சு போச்சு அவருக்கு. பொதுவா எல்லா ஹொட்டேலிலும் இருக்கும் ஆட்டோ லாக்ன்னு நினைச்சுச் சாத்திட்டு வந்துருக்கார். ஊம்....இருக்குமோன்னு, இன்னொருக்கா செக் பண்ணிப்பார்த்தால் சாவி போட்டுத் திருப்புனாத்தான் பூட்டுது.
அறைக்குள்ளே போய்ப் பார்த்தால் எல்லாம் சரியாத்தான் இருக்கு. திருநெல்வேலிக்காரங்க, அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு புரிஞ்சது. நம்ம ஆர்யாஸிலேயே போய் சாப்பிட்டோம். இடியாப்பம் கிடைச்சது. அவருக்குக் குருமாவும் எனக்கு சக்கரையுமா. அப்படியே முன்பக்கப் படிகளில் இறங்கி ஒரு வாக் போனா.......
ரெண்டு லேடீஸ் வந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆன்மீக மீட்டிங் (ராஜயோகமாம்) இங்கே எங்கே நடக்குதுன்னாங்க?
க்யா மாலும்? லௌகீகம்தான் இந்த க்ஷணத்துத் தெரியுது நமக்கு. பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு அரைமணிநேரம் நெட்டிலே உலாவி மெயில் பார்த்துக்கிட்டு இந்தப் பக்கம் நடந்தால் ஒரு ம்யூஸிக் ஷாப் கண்ணுலே பட்டது. கால்கள் தானாக அங்கே போச்சுங்க. தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே:-)
நாந்தான் அறுதப் பழசா சில படங்கள் வாங்கினேன். நூத்துக்கு நூறு, பாலாபிஷேகம் இப்படி. மலையாளப்படங்கள் இருக்கான்னு தேடுனா கொஞ்சம் இருக்கு. அதுலே நாடோடிக்காற்று, ஃபோட்டோகிராஃபர், நிவேத்யம் இப்படி. விற்பனைப்பெண் கிறிஸ்டி பயங்கர ஸ்நேகம். சிடி வேலை செய்யலைன்னா எத்தனை நாள் கழிச்சு வந்தாலும் மாத்தித் தருவாங்களாம். அட! இதையே சாக்கா வச்சு இன்னொருக்கா இந்தப் பக்கம் வந்துறணும்:-)
இருட்டுக்கடை அல்வா எப்படித்தான் இருக்குன்னு பார்த்துறலாமே! பொதியைத் திறந்தால் கருப்பும் இல்லாம ப்ரவுணாவும் இல்லாம ஒரு நிறத்துலே இருக்கு. பார்க்க அப்பீலா இல்லை. கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்தேன். பனங்கல்கண்டு இல்லைன்னாக் கருப்பட்டி ருசியும் வாசனையும் தெரியுது. கையிலே பிசுக்குன்னு ஒட்டாமல் நெய் நிறையதான் போட்டுச் செஞ்சுருக்காங்க. ஆனால் இன்னமும் புரியாத ஒன்னு என்னென்னா எப்படி நூறு ரூபாய்க்குக் கட்டுபடி ஆகுதுன்றதுதான்? போதும் ருசி பார்த்தது. அதான் ஃப்ரிஜ்லே வைக்காமலேயே கெடாதாமே. அண்ணன் அண்ணிக்கு எடுத்துவச்சுட்டேன்.
தெந்தமிழ்நாடுகளில் மாடு, யானைன்னு கட்டிப் போர் அடிச்ச காலம் மாறி இப்பெல்லாம் கார் ஓட்டிப் போர் அடிக்கும் காலம் வந்தாச்சேன்னு பாடலாம் போல இருக்கே. கும்பகோணம் போனப்ப இருந்தே இதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் இந்தப் பக்கங்களில் நீர்வளம் குறையாமல் இருப்பதால் சாகுபடி நல்லாவே இருக்கு. அதான் தெங்கும் வாழையுமா கண்நிறைஞ்சு கிடக்கே.
குறுகலான சாலைகளிலும் இப்படிக் குவிச்சுப்போட்டு வைச்சிருக்கறது நல்லதுக்கில்லை. கொஞ்சம் ஒரு வண்டி போகும் அளவுக்காவது இடம் வுட்டுருக்கலாமோ? (அதுக்கேது இடம்?) வண்டிச் சக்கரங்களில் இந்த வைக்கோல்கள் சிலசமயம் மாட்டிக்கிட்டு விபத்தும் நடந்துருதாம். உலகநாதன் புலம்பலை ஊர்மக்கள் கேட்டுட்டாலும்......
தினம்தினம் ஆர்யாவில் (நேத்து ஒருநாள்தான் சாப்புட்டு இருக்கோம், அதுவே தினம்தினமா?) என்ன ப்ரேக் ஃபாஸ்ட்? வேற எங்கியாவது போகலாமுன்னு சொன்னப்ப, 'ஜானகிராமன்' போகலாம்னு உலகநாதன் கூட்டிப்போனார். (ஜானகிராமன்......ஆஹா....எங்க மாமா ஒருத்தர் இந்தப் பெயரில் இருந்தார். காந்திக் காங்கிரஸ் ஆளு. கதர்தான் போட்டுக்குவார். கூடவே ஒரு குல்லாவும்)அருமையா இருக்கு அந்த ரெஸ்டாரெண்ட். ரெஸ்ட்ரூம் வசதி அமோகம். நீட் & டைடி.(அப்பப்ப இந்த ரெஸ்ட்ரூம்களைப் போகறபோக்கில் சொல்லிட்டுப் போறது எதுக்குன்னா..... பயணிகளுக்கு, முக்கியமாப் பெண் பயணிகளுக்குப் பயனா இருக்குமேன்னு. ச்சும்மா டிப்ஸ்)
மெனுகார்டைப் பார்த்தால் இதுக்குமுன்னே இதையே எங்கியோ பார்த்த ஞாபகம். ரெண்டு வினாடிக்குப் பிறகு புரிஞ்சது. ஆர்யாஸ் ரெஸ்ட்டாரெண்டில் இதை, இதே ஆர்டரில் பார்த்துருக்கோம். அதோட ஃபோட்டோக் காப்பியா என்ன?
எதையும் தீர விசாரிக்கணும். அப்ப உண்மை தெரிஞ்சுரும். தெரிஞ்சதே..... இந்த ஜானகிராமனும், ஆர்யாவும் ஒரே குடும்பமப்பா:-)))) சிஸ்ட்டர்ஸ். ஆனா ஆர்யாவில் ஃபேமிலி ரெஸ்ட்டாரெண்ட். டைனிங்ஹால் நடுவில் குழந்தைகள் ஏரியா. விளையாட இடம் நல்லாவே இருக்கு. நேத்து இரவு புள்ளைகள் பாட்டுக்கு விளையாட, அம்மாக்கள் கையிலே தட்டை எடுத்து வச்சு, ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. ஜானகிராமில் ப்ரைவஸிக்காக க்யூபிக்கிள். ஒரு காலத்துலே ஜானகிராமனுக்கு வந்த ஜோடிகள் அப்படியே இப்ப ஆர்யாவுக்கு ஷிஃப்ட் ஆகி இருப்பாங்க.
ஆர்யா ரெஸ்ட்டாரண்ட்
பாருங்க, பெருமாளைவிட்டுட்டு அனுமாரைப் பிடிச்ச கதையா.....சொல்லிக்கிட்டு இருந்ததை விட்டுட்டு....
விழாவுக்காக அலங்கரிச்சக் கொடிமரம்
திருவேங்கடநாதர் அச்சு அசலா நம்ம வெங்கிதான். அழகான அலங்காரத்தோட ஜொலிக்கிறார். கோவிலில் பட்டரைத் தவிர ஈயும் காக்காயுமா நாங்க ரெண்டே பேர். திவ்யமான தரிசனம். தரிசனம் ஆனதும் மண்டபத்தில் கொஞ்ச நேரம் பட்டரோடு பேசிக்கொண்டிருந்தோம். அவர் திருமண் இட்டிருந்த வகை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அழகா இருக்குன்னு சொன்னேன். (அழகை அழகுன்னு சொல்லித்தானே ஆகணும்?)
தென்திருப்பதி பட்டர் (பெயர்? சூர்யாவா, பாஸ்கரான்னு நினைவில்லே)
நாப்பது வருசப் பழக்கம்னு சொல்லிச் சிரிச்சார். கருடாழ்வார் இங்கு ஒரு தினுசா இருக்கார் பார்த்தீங்களான்னார். சரியாக் கவனிக்கலையேன்னு எழுந்துபோய்ப் பார்த்தேன். அட! வழக்கமா இருக்கும் ரெண்டு ரெக்கைகளையும் மடிச்சு வச்சுக்கிட்டு, ரெண்டு தோளிலும் சங்கு சக்கரத்தோடு காட்சி தர்றார்.
இங்கே வரும்போதே இன்னொரு கோவில் இருக்கறதைக் கவனிச்சேன். வரும்போது பார்த்துக்கலாமுன்னு நினைச்சதை மறக்காமல், அங்கேயும் போனோம். கீழத் திருவேங்கிடநாதபுரம். இதுவும் பெருமாள் கோவில்தான். வரதராஜப் பெருமாள். சின்னக்கோயிலாத்தான் இருக்கு. மண்டபத்தில் ஏறிப்போனதும், புதுசா பளபளன்னு மின்னும் கருடவாகனம் கண்ணைப் பறிக்குது. இவர் சமீபத்திய வரவு. மூலவராக ஸ்ரீதேவி & பூதேவி சமேதராய் நின்றவண்ணம், கேட்கும் வரங்களையெல்லாம் தரும் வரதராஜர். பட்டர் நிதானமா தீபாராதனை செஞ்சார். இங்கேயும் நமக்கு ஏகாந்த தரிசனம்தான்.

உற்சவர் கீழத்திருப்பதி
சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆனதும் கொஞ்சம் பூவோடு ரெண்டு ரூபாய் நாணயம் ஒன்னும், ஸ்ரீவரதராஜப்பெருமாளின் சிலபடங்களும், நவதிருப்பதிகள் ஸ்டிக்கர்ஸ் பிரசாதமாத் தந்தார். எதுக்கு இந்தக் காசு?இங்கிட்டு இருந்து அங்கிட்டுப்போறது எப்படி அங்கிட்டு இருந்து இங்கிட்டு வருது? பொதுவா நாம்தானே கோயிலுக்குக் காசு போடுவோமுன்னு குழப்பம்.


தலவரலாறு
இதெல்லாமொன்னும் தெரிஞ்சுக்காம 'தேமே' ன்னு (தெய்வமேன்னு சொல்வதன் சுருக்) போனதால் பட்டரே நமக்கு 'நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்'ன்னு கொடுத்துருக்கார். இந்தக் கோயில் சுக்கிரஸ்தலமாம். பிரகாரம் சுற்றலாமுன்னு படி இறங்குனதும், மடப்பள்ளியில் இருந்து, கையில் பாத்திரத்துடன் வந்தவர் நம் கைகளில் ததியோன்னம் வைத்தார். நல்ல இதமான சூட்டில் இருந்துச்சு, வழக்கமா ஆயிரம் யோசனை செய்யும் நான் என்னை அறியாமலேயே வாயில் போட்டுக்கிட்டேன். கோபால், 'இது என்ன விபரீதம்?' என்றதுபோல் முழிச்சாரா..அப்பத்தான் 'அடக்கடவுளே...என்ன காரியம் செய்துவிட்டேன்'னு விளங்குது. 'க்ருஷ்ணார்ப்பணம்'னு சொன்னேன்.

முள்காடாய் இருந்த இடமாம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆகி வருது. அனுமன் சந்நிதியில் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர். சிகப்பு மூக்கோடு இருக்கார். செந்தூரமோ? வரப்ரஸாதியாம். மனசுக்கு ரொம்பவே நிறைவான தரிசனம் இன்றைக்கு.
காஞ்சிபுரம் வரதனுக்கு வேண்டுனதை இங்கே கொடுக்கலாமாம். குன்றின்மேல் தென் திருப்பதின்னா, இங்கே இது தென் காஞ்சி.
நல்லா பிராஞ்ச் ஆஃபீஸ் வச்சுருக்காருப்பா சாமி!!!!
தொடரும்.........:-)